AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 7 ஜனவரி, 2013

நாடளுமன்ற தேர்தலில் ம.ம.க. வலுவான கூட்டணியில் இடம் பெறும்: ஜவாஹிருல்லா!

கடலூர்: நாட்டு நலன் கருதியும் சமுதாய நலன் கருதியும் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி வலுவான கூட்டணியில் இடம் பெறும் என்று பேராசிரியர் ஹெச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
த.மு.மு.க. மற்றும் ம.ம.க.வின் மூத்தத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஹெச். ஜவாஹிருல்லா தொகுதி நலப்பணிகளுக்காக சென்னையிலிருந்து இராமநாதபுரம் செல்லும் வழியில் கடலூர் மாவட்டத்தில் புதிய கிளை அலுவலகங்கள் திறப்பு விழாவிற்காக பரங்கிப்பேட்டை மற்றும் லால்பேட்டைக்கு வருகை புரிந்தார்.

அப்போது இந்நேரம்.காம் செய்தியாளரிடம் எதிர்வரும் நாடளுமன்ற தேர்தல் குறித்து பேசிய போது, "நாடளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் குறித்து முன்னதாகவே முடிவு எடுக்க முடியாது. நாட்டு நலன் கருதியும் சமுதாய நலன் கருதியும் ம.ம.க. மிக வலுவானக் கூட்டணியில் இடம் பெறும்" என்று தெரிவித்தார்.
மேலும், "கடலூர் மவாட்டத்தில் ம.ம.க. நல்ல வளர்ச்சியைப் பெற்று வருகிறது. இனி ம.ம.க. இங்கு மேலும் வலுப் பெற்று பொதுமக்களுக்கு பல நல்ல சேவைகளை செய்யும்" என்றும் கூறினார்.


Thanks இந்நேரம்.காம் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக