AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

காட்டுமன்னார்கோவிலில் கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரிப்பு: பொதுமக்கள், வியாபாரிகள் அச்சம்

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியல் சில நாள்களாக கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள், வியாபாரிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. 

காட்டுமன்னார்கோவில் கச்சேரி தெருவில் உள்ள ஒரு பலசரக்கு கடையில் நேற்று முன்தினம் ஒரு பெண் 500 ரூபாய் கொடுத்து சில்லறை வாங்கி சென்றுள்ளார். இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கல்லாப்பெட்டியில் உள்ள பணத்தை கடை உரிமையாளர் எண்ணியுள்ளார், அதில் 500 ரூபாய் கள்ளநோட்டு ஒன்று இருந்தது.

இதுகுறித்து கடையில் வேலை செய்யும் பெண்ணிடம் கேட்டபோது, ஒரு பெண் 500 ரூபாயை கொடுத்து தன்னிடம் சில்லரை வாங்கி சென்றதாக அவர் கூறினார். சில்லரை வாங்கி சென்ற அதே பெண் நேற்றும் அந்த கடைக்கு வந்து 500 ரூபாய் கொடுத்து சில்லரை கேட்டுள்ளார். அப்போது சுதாரிக்கொண்ட கடையின் உரிமையாளர் காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு தகவல் அளித்தார்.



இதையடுத்து சம்பவ இடத்து விரைந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளநோட்டு புழக்கம் காட்டுமன்னார்கோவில் பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக