AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 13 டிசம்பர், 2012

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல்

காகித ரூபாய் நோட்டுகள் விரைவில் சேதம் அடைவதால் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதை மத்திய மந்திரி ப.சிதம்பரம் உறுதி செய்தார். பாராளுமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது கேட்டப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதலில் 10 ரூபாய் நோட்டு பிளாஸ்டிக்கில் வெளியிடப்படும். தொடர்ந்து மற்ற ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் தற்போது வெளியிடப்படும். காகித ரூபாய் நோட்டுக்கள் 1 வருடம் கூட உழைப்பதில்லை. எனவே பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடிக்க அரசு முடிவு செய்துள்ளது.


இதில் உள்ள தொழில் நுட்பத்தை சமூக விரோதிகள் கூட தெரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. இதிலும் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படலாம். எனவே சோதனை அடிப்படையில் தற்போது 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுக்களை அச்சடிக்க அரசு முடிவெடுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக