ஆண்டுதோறும் ஜனவரி 25ல் வாக்காளர்கள் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது. வரும் 25ம் தேதி புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்க தேர்தல் அதிகாரிகளை, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஓட்டுச்சாவடி மையங்களில், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள், பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியப்போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் இணைந்து, விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்த வேண்டும். இதில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட வேண்டும்.
வாக்காளர் விழிப்புணர்வு குறித்து, புதிய வாசகங்களை உருவாக்கும் போட்டிகளும் நடத்தப்பட வேண்டும். இதற்காக சிறந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு, சான்றிதழ் வழங்க வேண்டும் என தேர்தல் அதிகாரிகளுக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
போட்டி நடத்த உதவுமாறு முதன்மை கல்வி அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள், நேரு யுவகேந்திரா, தொண்டு நிறுவனத்தினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் விழிப்புணர்வு குறித்து, புதிய வாசகங்களை உருவாக்கும் போட்டிகளும் நடத்தப்பட வேண்டும். இதற்காக சிறந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு, சான்றிதழ் வழங்க வேண்டும் என தேர்தல் அதிகாரிகளுக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
போட்டி நடத்த உதவுமாறு முதன்மை கல்வி அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள், நேரு யுவகேந்திரா, தொண்டு நிறுவனத்தினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக