AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 28 நவம்பர், 2012

ரம்ஜான் தைக்காலில் பள்ளிவாசலி​ல் சமூக விரோதிகள் மது அருந்தியதை கண்டித்ததா​ல் கலவரம்

லால்பேட்டை அருகில் உள்ள   ரம்ஜான் தைக்காலில் பள்ளிவாசல் காம்பவுண்ட் சுவரில் இருதயபுரத்தை சேர்ந்த தலித் கிறிஸ்தவ இளைஞர்கள் திங்கள் கிழமை இரவு அமர்ந்து மது அருந்தியுள்ளனர் இதை பார்த்த  ரம்ஜான் தைக்காலை சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் ஏன் இங்கு அமர்ந்து மது குடிக்கிறீர்கள் என கேட்டுள்ளனர் அப்போதே பிரச்சனைக்குரியவர்கள்  வீண் தகராறு செய்ய  முற்பட்டுள்ளனர் இந்நிலையில் செவ்வாய்கிழமை காலை இருதயபுரத்திருலிந்து  20 பேர் கொண்ட  சமூக விரோத கும்பல் ரம்ஜான் தைக்கால் வந்து முஸ்லிம் இளைஞர்களை தாக்கினர் இதையடுத்து இரு தரப்பினருக்கு மத்தியில் மோதல் ஏற்பட்டது இது குறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி.ஆறுமுகசாமி .இன்ஸ்பெக்டர் ,ராமமூர்த்தி , காட்டுமன்னார்குடி சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமரன் மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்  இரு தரப்பினர் மீதும்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக