அல் அய்ன் மண்டல தமுமுக சார்பில் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் 01-06-2012 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பின் கத்தாரா மர்கசில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கத்தாரா பகுதி தலைவர் காட்டுமன்னார்குடி அஸ்கர் அலி தலைமை தாங்கினார்.மாணவி தஞ்சை ஹீரியா சாதிக் அலி திருக்குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.
மண்டல முன்னாள் தலைவர் கொள்ளுமேடு முஹம்மது ரிஃபாயி தொடக்க உரையாற்றினார்.அவர் தனது உரையில் தமுமுக தமிழகத்தில் செய்து வரும் பணிகளை விவரித்தார்.கோவை சிறைவாசிகளின் விடுதலைக்காக சமுதாயக் களத்திலும்,சட்டமன்றத்திலும் தமுமுக/மமக ஆற்றிவரும் பணிகளை குறிப்பிட்டார்.அமீரக தமுமுக துணைச்செயலாளர் டாக்டர் அப்துல் காதர்,நபிகளார் பாதையே வெற்றிப் பாதை என்பதை விளக்கி “இஸ்லாத்தின் பார்வையில் வெற்றி” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
மண்டல மருத்துவ அணி செயலாளரும்,வட்டியில்லாக் கடனுதவி திட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினருமான கீழை முஹம்மது இபுனு வட்டியில்லாக் கடனுதவி திட்டம் குறித்த சில அறிவிப்புகளை செய்தார்.இறுதியாக கிராஅத் ஓதிய மாணவி ஹீரியா சாதிக் அலிக்கு பொறியாளர் கீழை அமீனுல் ஹுசைன் நினைவுப் பரிசு வழங்கினார்.
மண்டல நிர்வாகி களப்பால் சையது யூசுப் நன்றியுரை, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக