AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 3 ஜூன், 2012

11.55 லட்சம் பேர் எழுதியுள்ளனர் நாளை 1.30 மணிக்கு 10ம் வகுப்பு ரிசல்ட்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ் 21&ம் தேதி அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும். தமிழகத்தில் 10&ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 4&ம் தேதி தொடங்கி 23&ம் தேதி முடிந்தது. தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 22 ஆயிரத்து 377 மாணவர்கள், 5 லட்சத்து 32 ஆயிரத்து 810 மாணவிகள் உள்பட மொத்தம் 11 லட்சத்து 55 ஆயிரத்து 187 பேர் தேர்வு எழுதினர். கடந்த கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி முறையின் கீழ் 10&ம் வகுப்பு மாணவர்கள் முதல் முறையாக பொதுத் தேர்வு எழுதினர்.

நாளை பிற்பகல் 1.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. பிளஸ் 2 வகுப்பு போல, 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த ஆண்டு முதல் போட்டோவுடன் கூடிய மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 21&ம் தேதி அந்தந்த பள்ளியில் வழங்கப்படும். 
தேர்வெழுதிய அனைத்து பாடங்களுக்கும் மதிப்பெண் மறுகூட்டல் செய்ய விரும்புவோர் விண்ணப்பங்களை 5&ம் தேதி முதல் 7&ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்வு துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.





0 கருத்துகள்:

கருத்துரையிடுக