AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 22 மார்ச், 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது​: இந்தியா ஆதரித்து வாக்கு!


ஜெனீவா:ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்தது.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக்கட்டப் போரில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை படுகொலைச் செய்து இலங்கை ராணுவம் நடத்திய அட்டூழியம் உலக அளவில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இலங்கை நிகழ்த்திய இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்களுக்கு எதிராக ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் தாக்கல் செய்தது. இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 24 நாடுகளும், எதிராக 15 நாடுகளும் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை.
இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக