AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 7 மார்ச், 2012

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் - 69 முஸ்லிம்கள் வெற்றி பெற்று சாதனை


உத்தரப்பிரதேச சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் 69 முஸ்லிம்கள் வெற்றி பெற்றுள்ளனர். 64 முஸ்லிம் வேட்பாளர்கள் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளனர்.
உத்திரப்பிரதேச சட்டமன்றத்தில் 403 இடங்கள் உள்ளன. விடுதலை பெற்ற இந்திய வரலாற்றில் இப்போது தான் முதன் முறையாக முஸ்லிம்கள் மிக அதிக எண்ணிக்கையில் உத்தரபிரதேச சட்டப்பேரவையில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 84 வேட்பாளர்களையும், சமாஜ்வாதி கட்சி 75 வேட்பாளர்களையும் காங்கிரஸ் கட்சி 64 வேட்பாளர்களையும் களம் இறக்கியது. இதில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த 43 முஸ்லிம் வேட்பாளர்களும், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 16 முஸ்லிம்களும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 முஸ்லிம்களும், பீஸ் கட்சியை சேர்ந்த 3 முஸ்லிம்களும் (டாக்டர் அய்யுப் தலைமையிலான இந்த கட்சியின் முஸ்லிமல்லாத வேட்பாளர் மேலும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றார்), ஏக்தா தலம் கட்சியை சேர்ந்த 2 முஸ்லிம்களும் இத்திஹாதே மில்லத் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் வெற்றி பெற்றுள்ளனர். (கடந்த சட்டப்பேரவையில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 29 பேரும், சமாஜ்வாதி கட்சி சார்பில் 21 முஸ்லிம்களும், ஆர்எல்டி சார்பில் 3 முஸ்லிம்களும் சுயேச்சைகள் 3 என மொத்தம் 56 முஸ்லிம் எம்எல்ஏ க்கள் இருந்தனர்)
பீஸ் பார்ட்டி ஆப் இந்தியா, உலமா கவுன்சில் என பல முஸ்லிம் கட்சிகளும் தனித்தனியாக கூட்டணி வைத்து தேர்தலில் போ்ட்டியிட்டன. இருப்பினும் பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த முறை முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சிக்கே தங்கள் வாக்குகளை செலுத்தினர். இதன் விளைவாக சமாஜ்வாதி கட்சி 224 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் உ.பி. யில் எந்தவொரு கட்சி இந்த அளவு அதிக இடங்களில் வெற்றி பெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 140ல் முஸ்லிம்கள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் நிலையில் உள்ளனர். இந்த தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை 30 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளது. முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் உள்ள இந்த 140 தொகுதிகளின் முடிவுகளை ஆய்வு செய்யும் போது இதில் பாதியளவு (72) தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றுள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 27 இடங்களிலும் ஆக குறைவாக முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று வார்த்தை ஜாலம் செய்த காங்கிரஸ் 11 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸின் கூட்டணி கட்சியான அஜித் சிங்கிள் ஆர்எல்டி முஸ்லிம்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் 2ல் வெற்றி பெற்றது. முஸ்லிம் கட்சியான பீஸ் கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றது. முஸ்லிம்கள் மிக நேர்த்தியாக தங்கள் வாக்குரிமையை செலுத்தியுள்ளார்கள் என்பதற்கு இது எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முஸ்லிம்களை வார்த்தை ஜாலங்களால் ஏமாற்ற முடியாது என்பதையும் இந்த முடிவுகள் எடுத்துக்காட்டியுள்ளன. அரசியல் சாசன சட்டத்தை திருத்தி முஸ்லிம்களுக்கு 18 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க வழிவகுப்பேன் என்று முலாயம் சிங் யாதவ் வாக்குறுதி அளித்தார் என்பது கவனிக்கத்தக்கது.
கடந்த 2007ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 56 முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள். இவர்களில் இருவர் பெண்களாவர். இம்முறை முஸ்லிம் எம்எல்ஏ க்களின் எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளதுடன் முஸ்லிம் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 3 ஆக உயர்ந்துள்ளது. வெற்றி பெற்ற முஸ்லிம் வேட்பாளர்களில் மிக அதிக வாக்கு வித்தாயசத்தில் வெற்றி பெற்றவர் சமாஜ்வாதி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான முஹம்மது ஆஜம் கான். இவர் ராம்புர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தன்வீர் அஹ்மது கானை 63269 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மிக குறைவான வாக்குகள் (18)  வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முஸ்லிம் வேட்பாளர் பாஹேரி தொகுதியில் வெற்றி் பெற்ற சமாஜ்வாதி கட்சியின் அதாவுர் ரஹ்மான் ஆவார். 2007 சட்டப்பேரவை தேர்தலின் போது முலாயம் சிங், கல்யான் சிங்கை கட்சியில் சேர்த்ததை எதிர்த்து அஜம் கான் கட்சியை விட்டு வெளியேறினார். பிறகு கல்யான் சிங் நீக்கப்பட்ட பிறகு மீண்டும் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து 2012 தேர்தலில் அதன் வெற்றிக்கு பெரிதும் உதவியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் முஸ்லிம்கள் 19 விழுக்காடு உள்ளனர். இந்த அடிப்படையில் பார்த்தால் 75 முஸ்லிம் சட்டபேரவை உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தற்போது 69 முஸ்லிம்கள் வெற்றி பெற்றிருப்பது பெரும் சாதனையாகும்.

இ. அருட்செல்வன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக