AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 6 மார்ச், 2012

இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் மார்ச் 10-ல் நாடு முழுவதும் இ.யூ. முஸ்லிம் லீக் வெற்றி விழா சென்னை செய்தியாளர் கூட்டத்தில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிவிப்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தோடு, இப்பெயரை பயன்படுத்தி குழப்பம் விளைவித்து வந்தவர்கள் இக் கட்சிக்கு சம்பந்த மில்லாத தனி நபர்கள் எனவும் தெளிவுபடுத்தி யுள்ளது. 
வரும் மார்ச் 10-ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 65-ம் ஆண்டு நிறுவன தினத்தை வெற்றிவிழா வாக நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது என பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப் பிட்டுள்ளார்.
சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள பத்திரிகை யாளர் மன்றத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலா ளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப் பிட்டதாவது-
இந்திய வரலாற்றில் பிரிக்க முடியாத அங்கம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்திய வரலாற்றோடு பிரிக்க முடியாத ஒரு அங்கம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. 1906-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி தொடங்கப்பட்ட அகில இந்திய முஸ்லிம் லீக் 1948-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உருவானது. 
தேசிய ஒருமைப்பாடு , சமய நல்லிணக்கம், சிறுபான்மையி னரின் தனித்தன்மையை பாது காத்தல் என்பது இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் லட்சியம். 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உருவாக்கப்பட்ட அன்றைய காலகட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநிலப் பெயர்களில் செயல்பட்டு வந்தது. தமிழ்நாட்டில் தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்றும், கேரள, கர்நாடக, ஆந்திர மாநிலங் களில் அந்தந்த மாநிலப் பெயர்களில் தேர்தல் ஆணை யங்களில் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வந்தது. 
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவர்களான காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப், இப்ராஹீம் சுலைமான் சேட், குலாம் மஹ்மூது பனாத்வாலா, இன் றைய தலைவர் இ.அஹமது உள்ளிட்ட அனைவரும் கேரள மாநிலத்திலிருந்து நாடாளு மன்ற உறுப்பினர்களாக தேர்ந் தெடுக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் முஸ்லிம் லீக் கேரள ஸ்டேட் கமிட்டி என்ற பெயரிலேயே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு இ.அஹமது சாஹிப் தலைவராகவும், பேரா சிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகிய நான் பொதுச் செய லாளராகவும், தேர்ந்தெடுக் கப்பட்டதும் கடந்த 4 ஆண்டு களுக்கு முன் நாடு முழுவதும் ஒரே பெயரில் இயங்குவது என முடிவு செய்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டோம்.
இதற்காக கேரள மாநிலத்தின் பிரைமரி, மாவட்ட, மாநில அமைப்புக்கள் முறைப் படியாக தீர்மானங்கள் நிறை வேற்றி அம் மாநிலத்தின் 20 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பி.க்கள், 4 அமைச்சர்கள் என அத்தனை பேரின் வாக்குமூலங்களும் பெற்று தேர்தல் ஆணையத் திடம் முறைப்படியாக சமர்ப் பிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் தெளிவான தீர்ப்பு!
ஆனால், தாவூத் மியாகான், ஃபாத்திமா முஸப்பரால் தலைவர் என சொல்லப்படும் உ..பி.யின் பஷீர் அஹமதுகான் ஆகியோர் இதற்கு ஆட்சே பணை தெரிவித்து தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தி ருந்தனர். அனைத்தையும் பரிசீலனை செய்த இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் மாதம் 3-ம் தேதி தெளிவான ஆணை பிறப்பித்தது. 
அந்த ஆணையின்படி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுகிறது என்றும், முஸ்லிம் லீக் கேரள ஸ்டேட் கமிட்டி என்னும் பெயர் தேர்தல் ஆணையத்தின் அரசி யல் கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகவும், கேரளாவில் அங்கீகரிக்கப்பட்ட `ஏணி� சின்னம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கப்படுவதாகவும் அறிவிக் கப்பட்டுள்ளது. 
அந்த ஆணையில் எம்.ஜி. தாவூத் மியாகான், ஃபாத்திமா முஸப்பரால் தலைவராக சொல் லப்படும் பஷீர் அஹமதுகான் ஆகியோர் தனி நபர்கள் என்றும், அவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் உறுப்பினர்கூட இல்லை. இந்த கட்சி பற்றி அவர்கள் ஆட் சேபணை தெரிவிப்பதற்கு தகுதி இல்லை என்று தெளிவுபடுத்தி விட்டது.
எனவே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரையும், பச்சிளம் பிறைக்கொடியையும் நாங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இவைளைத் தவறாக பயன்படுத்துவோர் மீது நாஙகள் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளோம். இந்த பெயரைப் பயன்படுத்தி செய்திகளை தரும் போது பத்திரிகையாளர்களும் இந்த உண்மைகளை புரிந்து கொள்ள வேண்டும் என்ப தற்காகவே இந்த பத்திரி கையாளர் சந்திப்பு நடத்தப் படுகிறது.
மார்ச் 10 இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 65-வது நிறுவன தினம். இந் நாளை தேர்தல் ஆணையத்தின் அங்கீகார வெற்றி விழா நாளாக நாடு முழு வதும் கொண்டாட உள்ளோம்.
டெல்லியில் மத்திய அமைச்சர் இ.அஹமது சாஹிப் தலைமையில் விழா நடை பெறுகிறது. சென்னை மண்ண டியில் நான் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மார்ச் 23-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள சிராஜ் மண்ட பத்தில் வெற்றி விழா பிரம் மாண்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊர்களில் பச்சிளம் பிறைக் கொடிகள் ஏற்றப்படுகின்றன. 60-க்கும் மேற்பட்ட ஊர் களில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப் பிட்டார்.
பேட்டியின் போது மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், பொருளா ளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கி ணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான், எம்.பி. மாநிலச் செய லாளர்கள் காயல் மகபூப், கமுதி பஷீர், திருப்பூர் சத்தார், வழக் கறிஞர் வெ. ஜீவகிரிதரன், எஸ்.டி.யு. மாநில அமைப்பாளர் கே.எம். நிஜா முதீன், முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செயலாளர் மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில், மேலாளர் எஸ்.ஏ. இப்ராஹீம் மக்கீ, எம்.எஸ்.எஃப் மாநில இணைச் செயலாளர் டி.கே. ஷாநவாஸ், வட சென்னை மாவட்டத் தலைவர் எம். ஜெய்னுல் ஆபிதீன், செய லாளர் ஏ.எச். இஸ்மாயில், தென் சென்னை மாவட்டத் தலைவர் பூவை முஸ்தபா, செயலாளர் ஹைதர் அலிகான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக