AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

இறைத்தூதரை அவமதித்த சவூதி வலைப்பூ பதிவர் மலேசியாவில் கைது


கோலாலம்பூர்:ட்விட்டர் சமூக இணையதளம் வாயிலாக முஸ்லிம்களின் உயிரினும் மேலான இறைத்தூதர் முஹம்மது நபியை குறித்து கேலி செய்யும் வகையில் விமர்சனம் செய்த சவூதி அரேபியாவை சார்ந்த வலைப்பூ பதிவரை மலேசியா போலீஸ் கைது செய்தது. 23 வயதான ஹம்ஸா கஸ்காரி சவூதி அரேபியா அதிகாரிகளின் உத்தரவின் பேரில் மலேசியாவில் வைத்து கைதானார்.


அரசியல் புகலிடம் தேடி நியூசிலாந்திற்கு செல்லவிருந்த ஹம்ஸா, விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கடந்த வாரம் ஹம்ஸா, ட்விட்டர் சமூக வலை தளத்தில் முஹம்மது நபியின் பிறந்த நாளில் அவர்களைக் குறித்து அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை ட்விட்டரில் போஸ்ட் செய்தார். இவரின் கருத்துக்களுக்கு எதிராக சவூதி அரேபியா மார்க்க அறிஞர்களும், மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கஸ்காரி தனது ட்விட்டர் கருத்தை வாபஸ் பெற்றார். இவரின் ட்விட்டர் அக்கவுண்ட் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக