AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

பொதுப்பணித்துறை நடவடிக்கை வீராணம் ஏரியில் நீர் தேக்கும் பணி தீவிரம்

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியின் முழு கொள்ளளவுக்கு தண்ணீர் தேக்கும் பணியில் பொதுப்பணித்
துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
காட்டுமன்னார்கோவிலில் உள்ள மிக பெரிய ஏரி வீராணம் ஏரி. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக நேரடியாக தண்ணீர் வரும். மழை காலங்களில் செங் கால் ஓடை வழியாக தண்ணீர் வருகிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். ஏரியின் மூலம் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஏரியை சுற்றி 34 மதகுகள் மூலம் பாசனம் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தை முன்னிட்டு ஏரியின் நீர் மட்டத்தில் 45 அடி தண்ணீர் தேக்கி வைப்பர். இதில் இருந்து பாசனத்திற்கும், சென் னைக்கு குடிநீரும் செல்கிறது. மழை காலங்களில் பெய்யும் மழைநீர் பல பகுதிகளில் இருந்து ஏரிக்கு வரும். இதன் காரண மாக ஏரியை சுற்றியுள்ள மதகுகள் திறக்கப்படும்.
இந்நிலையில் கோடை காலம் தொடங்க உள்ளதால் ஏரியில் இருந்து சென் னைக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி அனுப்புவதற்கு ஏதுவாக ஏரியின் முழு கொள்ளளவான 47.50 கன அடி தண்ணீரை தேக்கும் முயற்சியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். முதற் கட்டமாக பொதுப்பணி துறை அலுவலர்கள் ஏரியில் முழுமையாக தண்ணீர் தேக்கும் போது மதகுகள் வழியாக வெளியேறாமல் இருக்க, ஏரியினை சுற்றி பார்வையிட்டு மணல் மூட்டைகளை தயார் செய்து, நீர்கசிவு ஏற்படும் இடங்களில் வைத்து வருகின்றனர்.
தற்போது ஏரியில் 45.10 அடி தண்ணீர் உள்ளது. வடவாறு வழியாக வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இதிலிருந்து பாசனத்திற்கு 500 கனஅடியும் சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 21 கனஅடியும் அனுப்பப்படுகிறது.

1 கருத்துகள்:

E.S Rajeshwari சொன்னது…

மிகவும் நல்ல விஷயம் !!!

கருத்துரையிடுக