AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 24 ஜனவரி, 2012

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய புதிய தலைவரின் அறிவிப்புகள் - மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு


மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அனைத்து செயல்பாடுகளும் வெளிப்படையாக அமையும் என்று தேர்வாணையத்தின் புதிய தலைவராக பதவியேற்றுள்ள திரு. நட்ராஜ் அறிவித்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. கடந்த சட்டபேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் இளைஞர்கள் பெரிதும் உழைத்து எழுதும் தேர்வுகள் வெளிப்படையாக அமைய வேண்டுமென்று கோரிக்கை வைத்தேன். தேர்வு முடிந்தவுடன் அதற்கான விடைகளும் வெளியிடப்பட வேண்டுமென்றும், குறைந்த கட்டணம் வசூலித்து விடைத்தாளும் தேர்வாளர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்றும் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். இந்த கோரிக்கைகளை ஏற்று தேர்வு முடிந்தவுடன் விடைகள் வெளியிடப்படும் என்றும் விரும்பமுள்ளவர்களுக்கு விடைதாள் (Answer sheet) அளிக்கப்படும் என்றும் தலைமை ஏற்றவுடன் திரு. நடராஜ் அறிவித்துள்ளதை பாராட்டுவதுடன் அவருக்கு நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதேபோல் எழுத்து தேர்வும், நேர்முக தேர்வும் வீடியோவில் பதிவு செய்யப்படும் என டி.என்.பி.எஸ்.சி. யின் புதிய தலைவர் அறிவித்துள்ளதையும் வரவேற்கிறேன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக