AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 5 ஜனவரி, 2012

கர்நாடக மாநிலத்தில் பாகிஸ்தான் கொடி ஏற்றிய ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கைது.


கர்நாடக மாநிலம், பிஜப்பூரை அடுத்த சிந்தகி நகரத்தில் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 1 ந் தேதி அதிகாலை பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டு பறந்து கொண்டிருந்தது. புத்தாண்டு தினத்தன்று நடந்த இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், மக்களிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதை கண்டித்து பந்த், பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் போன்ற வன்முறை சம்பவங்கள் நடந்தன.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் கொடி ஏற்றியதாக கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு மாணவரை தேடி வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள். எதற்காக அவர்கள் பாகிஸ்தான் கொடி ஏற்றினார்கள் என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக