AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வெள்ளி, 23 டிசம்பர், 2011

முஸ்லிம்களுக்கு எதிராக இந்து முன்னணி சுவரொட்டி ! காவல் துறை உதவியோடு முறியடித்த INTJ & TMMK

முஸ்லிம்களுக்கு   எதிராக இந்து முன்னணி சுவரொட்டி !
காவல் துறை உதவியோடு முறியடித்த  INTJ & TMMK 




தனிப்பட்ட மனிதர்களின் , தனிப்பட்ட குழுக்களின் தவறுகளை இஸ்லாத்தின் தவறாக சித்தரித்து ,முஸ்லிம்களை தீவிரவாதிகளாக ,கெட்டவர்களாக் சித்தரிக்கும் போக்கு உலக அளவில் யூத சியோனிச சக்திகளாலும் ,இங்கு நமது நாட்டில் பார்ப்பன பனியா கும்பலும் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.


அந்த பார்ப்பன பணியா கும்பல் தமிழகத்தில் இந்து முன்னணி என்று செயல் பட்டு வருகிறார்கள்.சென்னை விருகம்பாக்கத்தில் யாரோ ஒரு தனி நபர் செய்த  அரசு நில ஆக்கிரமிப்பை இஸ்லாமிய சமுதாயத்தின் தவறாக சித்தரித்து, அதை மீட்ட அரசை பாராட்டி  போஸ்டர் அடித்து   பேனர் வைத்து பொதுக் கூட்ட ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. இதைக் கண்ட இயக்க சகோதர்கள் கொதித்து போய் காவல் துறையினரை அணுகி உடனடியாக இவை அகற்றப் பட வேண்டும் ! இந்த பாராட்டுக் கூட்டம் நிறுத்தப் பட வேண்டும் ! இலையென்றால் மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும்! அரசியல்வாதிகளிடம் இருந்து அரசு நிலங்களை மீட்கும் போதெல்லாம் நாங்கள் 'இந்துக்களிடம் இருந்து சொத்தை மீட்ட அரசுக்கு நன்றி' என்று நாங்கள் போஸ்டர் போட்டால் என்னவாகும்? என கேட்டு பிரச்னை எழுப்பிய பின் காவல் துறை உயர் அதிகாரிகள் உடனடியாக நேரில் வந்து போஸ்டர் பேனர்கள் அகற்றப் பட்டு கூட்டமும் ரத்து செய்யப் பட்டது. தமுமுக மற்றும் எம்.ஜி.ஆர்.நகர் இதஜ வினரின் முயற்சியால் இந்து முன்னணியின் முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப் பட்டது. நாம் விழிப்போடும், இணைப்போடும் இருந்தால் இறையருளால் எதிர்களின் சூழ்சிகளை எளிதில்   முறியடிக்கலாம் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக