நாட்டில் உள்ள முஸ்லிம்கள் நிலைமை மோசமாக உள்ளதாகவும் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பதாகவும் 2006-ம் ஆண்டு தாக்கல் செய்த சச்சார் கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டது. அதன் அடிப்படையில், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதாக 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
இந்த நிலையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்ட திருத்தம் செய்ய மத்திய அரசு தயாராகி வருகிறது.
இது தொடர்பான, ஆலோசனை குறிப்புகளை பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய சிறுபான்மை விவகாரதுறை அமைச்சகம் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக