தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஹெச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
குஜராத் மாநிலத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த நதிம் சையது என்ற செயல்பாட்டாளர் கொல்லப்பட்டதை வண்மையாக கண்டிக்கின்றோம்.
2002ல் நடைபெற்ற குஜராத் படுகொலைகளில் முக்கிய வழக்குகளில் ஒன்றான நரோடா பாடியா வழக்கில் நதிம் சையது முக்கிய சாட்சியாக விளங்கினார்.
அஹமதபாத்தில் செயல்பட்டு வந்த சட்டவிரோத கால்நடை வதை நிலையங்கள் பற்றியும் இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக பெற்ற தகவல்கள் குஜராத் அரசுக்கு பெரும் அவமானமாக விளங்கியது. நரேந்திர மோடி தலைமையிலான குஜராத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதையும், நேர்மையாளர்களின் உயிர்களுக்கு உத்திரவாதம் இல்லை என்பதையும் நதிம் சையது படுகொலை மீண்டும் நிருப்பித்துள்ளது.
--- எம்.ஹெச்.ஜவாஹிருல்லா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக