பொறியியல் படிப்பை மேற்கொள்ள தேர்ந்தெடுக்கும் வெளிநாடுகளில், சிங்கப்பூர், ஜெர்மனி போன்ற நாடுகளும் முக்கிய இடம் வகிக்கின்றன.
சிங்கப்பூர்
கடந்த சில வருடங்களாக சிங்கப்பூர் கல்வி உலகளவில் பிரபலமடைந்துள்ளதாலும், இந்தியாவிற்கு அருகாமையில் உள்ளதாலும், பாதுகாப்பான நாடு என்று பெயர் பெற்றுள்ளதாலும், குறைவான கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாலும், ஏராளமான வேலை வாய்ப்புகள் கிடைப்பதாலும், இந்திய மாணவர்கள் மத்தியில் சிங்கப்பூர் கல்விக்கு, குறிப்பாக பொறியியல் கல்விக்கு மவுசு அதிகரித்துள்ளது. (kalvikalanjiam.com)
இந்நாட்டு பல்கலைகளில் சேர்க்கை விதிமுறைகள் எளிதானவை. மற்ற மேற்கு நாடுகளோடு ஒப்பிடுகையில், மாணவர் விசா பெறுவதற்கான தகுதித் தேர்வுகள் எளிமையானவை என்பதும் முக்கியமானது. ஒரு வருடத்திற்கான டியூஷன் கட்டணம் S$24,000 முதல் S$30,000 வரை ஆகிறது. வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையும் கிடைக்கிறது.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்(National university of Singapore), நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்(Nanyang technological university) மற்றும் சிங்கப்பூர் மேலாண்மைப் பல்கலைக்கழகம்(Singapore management university) ஆகிய 3 உள்நாட்டுப் பல்கலைகளும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பலவிதப் படிப்புகளை வழங்குகின்றன. மேலும், பல புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைகளும் இங்கே தமது வளாகங்களை வைத்துள்ளன. இந்நாட்டிலுள்ள பொறியியல் படிப்புகள் சிறப்பு வாய்ந்தவை.
ஜெர்மனி
ஐரோப்பிய யூனியன் நாடுகளில், மெஷினரி, ஆட்டோமொபைல், ரசாயனம் மற்றும் எலக்ட்ரிகல் பொருட்கள் மற்றும் ஐ.டி. துறையில் இந்தியாவின் முக்கிய கூட்டாளியாக ஜெர்மனி விளங்குகிறது. இந்நாட்டில், 300க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் இருப்பதால், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் முக்கிய நாடாக திகழ்கிறது.
ஜெர்மன் கல்வியின் சில சிறப்பு அம்சங்கள்,
* சிறந்த கல்வித்தரம்
* வெளிநாட்டு மாணவர்களுக்கு சரியான கட்டணத்தில் தரமான கல்வி வழங்கப்படுகிறது. பல கல்லூரிகள் அரசின் நிதியுதவியைப் பெறுபவை. அந்நாட்டிலுள்ள 16 மாநிலங்களில், 11 மாநிலங்கள், கடந்த 2010ம் ஆண்டில், தங்களுடைய கல்லூரிகளில் டியூஷன் கட்டணத்தை பெறவில்லை.
* ஜெர்மனியில் எந்தப் பல்கலையும் கல்வி உதவித் தொகைகளை வழங்குவதில்லை. ஆனால், பல தனியார் மற்றும் பொது நிறுவனங்கள், வாழ்க்கைச் செலவு மற்றும் புத்தகச் செலவுகளை ஈடுசெய்யும் வகையில் உதவித் தொகை திட்டங்களைக் கொண்டுள்ளன.
* படிப்பை முடித்தப் பிறகு, முக்கிய பன்னாட்டு நிறுவனங்களில் கட்டண முறையில் பயிற்சி பெறலாம். இதன்மூலம் முழுநேர வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
* படிப்பை முடித்தப்பிறகு, ஜெர்மனியில், கூடுதலாக ஒரு வருட காலம் தங்க அல்லது பணி செய்ய வெளிநாட்டு மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
* பல படிப்புகள் ஆங்கிலத்திலேயே கற்பிக்கப்படுகின்றன. ஜெர்மன் மொழி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை நீங்கள் ஜெர்மன் மொழியைக் கற்க விரும்பினால், ஜெர்மன் மொழித் தொடர்பான பாடங்களை இலவசமாகவே கற்கலாம்.
* ஒரு வெளிநாட்டு மாணவர் என்ற முறையில், நீங்கள் ஒரு வருடத்திற்கு 90 முழு நாட்கள் அல்லது 180 அரை நாட்கள் அந்நாட்டில் பணிபுரியலாம். இந்த உரிமையானது, வளாக வேலைகளுக்காக மட்டுமே என்ற அமெரிக்க விதிமுறை இங்கு இல்லை.
* ஜெர்மனியில் முழு நேரமாக 5 வருடங்கள் பணிபுரிந்தால் ஒரு வெளிநாட்டவர், நிரந்தர குடியுரிமையைப் பெறலாம்.
- தினமலர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக