AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

கடலூர், விருத்தாசலத்தில் இலவச லேப் டாப் வழங்கக்கோரி மாணவர்கள் போராட்டம்

கடலூர் : இலவச லேப்டாப் வழங்க கோரி கடலூர், விருத்தாசலத்தில் கல்லூரி முதுகலை மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிளஸ் 2, இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு இலவச லேப் டாப் வழங்கி வருகிறது. தங்களுக்கும் இலவச லேப் டாப் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் முதுகலை மாணவர்கள், மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி முதுகலை மாணவ, மாணவிகள் 120 பேர், இக்கோரிக்கையை வலியுறுத்தி நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இவர்களுக்கு ஆதரவாக இளங்கலை மாணவ, மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்தனர். இதேபோல், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி முதுகலை மாணவ, மாணவிகள் 250 பேர் இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் ஊர்வலமாக சென்று விருத்தாசலம் சப்கலெக்டர் ஆனந்தகுமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக