AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 22 செப்டம்பர், 2011

தனியார் மூலம் ஹஜ் பயணம் திட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவு : உயர் நீதிமன்றம் தீர்ப்பு !

புதுடெல்லி: தனியார் மூலமான ஹஜ் பயண திட்டத்தை நிறுத்தி வைக்க, மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சவுதி அரேபிய நீதிமன்றம், ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் பயணத்தை மேற்கொள்ள வரும் யாத்ரீகர்களுக்காக, ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிட்ட அளவில் விசாக்களை வழங்குகிறது. இதேபோல் இந்தியாவுக்கும், குறிப்பிட்ட அளவு விசாக்களை வழங்குகிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இவற்றில் பெரும்பகுதியை இந்திய 
ஹஜ் கமிட்டியிடமும், குறிப்பிட்ட அளவை மட்டும் தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கும் வழங்கும். இவற்றை கொண்டு தனியார் சுற்றுலா நிறுவனங்கள், ஹஜ் பயணிகளை சவுதி அரேபியாவுக்கு அழைத்து செல்லும். இந்நிலையில், தனியார் சுற்றுலா நிறுவனங்களை தேர்ந்தெடுத்து அங்கீகாரம் அளித்து, அவற்றுக்கு மட்டும் சவுதி அரேபியா விசாக்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதை தவிர மற்ற தனியார் சுற்றுலா நிறுவனங்கள் எதற்கும், சவுதி விசா வழங்கப்பட மாட்டாது. இதனால் அவர்கள் ஹஜ் பயணத்தை செயல்படுத்த முடியாது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த 14ம் தேதி, அறிவிப்பாணை வெளியிட்டது. அதில், 568 தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு அங்கீகாரம் 
அளிக்கப்பட்டிருந்தது. இவர்கள் மூலம் 45,491 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் என்று கூறப்பட்டிருந்தது.
மத்திய அரசின் இத்திட்டத்தை எதிர்த்து, அங்கீகாரம் கிடைக்காத தனியார் சுற்றுலா நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கிடையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி ராஜிவ் சஹாய் எண்ட்லா வழக்கை விசாரித்தார். அப்போது உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஏ.எஸ்.சந்தியாஹோகே ஆஜராகி, இதேபோன்ற வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது என்றும், இந்த வழக்கில் மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு 
மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்றும், அந்த வழக்கில் வரும் இறுதி தீர்ப்பை செயல்படுத்த அரசு தயாராக உள்ளது என்றும் கூறினார்.
இதையடுத்து நீதிபதி தனது உத்தரவில், ‘‘மத்திய அரசின் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் வரும் தீர்ப்பை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கலாம்’’ என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக