AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 22 செப்டம்பர், 2011

கிராம மக்களுக்கு அதிகாரம் : இந்தியாவுக்கு ஒபாமா பாராட்டு !

நியூயார்க் : கிராம மக்களுக்கு அதிக அதிகாரம், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை நாடு முழுவதும் சிறப்பாக செயல்படுத்துவதாக இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பாராட்டு தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் பிரேசில் தலைமையில் ‘அரசுகளுக்கு இடையே கூட்டணி’ என்ற பெயரில் நிர்வாகத்தில் வெளிப் படைத்தன்மை, ஊழல் எதிர்ப்பு, பொறுப்பேற்பு மற்றும் மக்களுக்கு கூடுதல் அதிகாரம் ஆகியவற்றுக்கு முயற்சி செய்வதற்கான அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் முதல் கூட்டம், நியூயார்க் நகரில் நேற்று நடந்தது.

அந்த அமைப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டும் இந்தியா சார்பில் யாரும் இடம்பெறவில்லை. எனினும், அங்கு பேசிய அதிபர் ஒபாமா, இந்தியாவை பாராட்டினார். ‘‘அதிக மக்கள்தொகை கொண்டிருந்தாலும், நாடு முழுவதும் கிராம மக்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பதிலும் வெளிப்படையான நிர்வாகம் ஏற்படுத்தும் முயற்சியிலும் இந்தியா பாராட்டுக்குரியது’’ என்றார்.

21ம் நூற்றாண்டில் மக்களுக்கு அதிகாரம் மற்றும் முன்னேற்றப் பாதையில் அரசுகளை மாறச் செய்தல் ஆகிய நோக்கில் அமைந்துள்ள இந்த அமைப்பில் 40 நாடுகள் இணைந்துள்ளன. இந்தியாவில் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதை போல துருக்கி, மெக்சிகோ, லைபீரியாவிலும் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. 
ஊழலை வெளிப்படுத்த மக்களுக்கு புதிய வழிகளை சிலி, கென்யா, பிலிப்பைன்ஸ் நாடுகள் ஏற்படுத்தியுள்ளதாகவும் அதிபர் ஒபாமா தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக