புதுடெல்லி, செப்.5-
செல்போனில் வரும் தேவையற்ற அழைப்புகளையும், எஸ்.எம்.எஸ்.களையும் தவிர்க்க டு நாட் கால் ரெஜிஸ்ட்ரரி பதிவு செய்து இருக்க வேண்டும். ஆனால், அது தற்போது தேசிய நுகர்வோர் விருப்ப பதிவு என்று மாற்றப்பட்டு உள்ளது.
தேவையில்லாத அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்.களை தவிர்க்க விரும்பும் பொதுமக்கள், இனிமேல் புதிய அமைப்பில் பதிவு செய்ய வேண்டும். இந்த அமைப்பு சில விதிமுறைகளை வகுத்து உள்ளது.புதிய முறைப்படி தொலைபேசி இலாகா 140 என்ற எண்ணை அறிமுகம் செய்துள்ளது.
தேவையில்லாத அழைப்புகளை தவிர்க்க விரும்பும் பொதுமக்கள், தேசிய நுகர்வோர் விருப்ப பதிவு மையத்தில் பதிவு செய்து விட்டால், அவர்களுக்கு 140 என்ற எண்ணை செல் நிறுவனங்கள் அளிக்க முடியாது.
இதன் மூலம் தேவையில்லாத அழைப்புகள் தவிர்க்கப்படும். இந்த அமைப்பு வருகிற 27-ந் தேதி முதல் செயல்படும்.






0 கருத்துகள்:
கருத்துரையிடுக