AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 25 ஜூன், 2013

கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக-மமகவின் ஒருங்கிணைந்த பொதுக்குழு

 கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக-மமகவின் ஒருங்கிணைந்த பொதுக்குழு இன்று (25-06-2013 செவ்வாய் கிழமை) சிதம்பரத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் மமகவின் இணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது மமக மாநில அமைப்பு செயலாளர்கள் மண்டலம் ஜெய்னுல் ஆபிதீன் எஸ்.சம்சுதீன் நாசர் உமரி மற்றும் மாவட்ட கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.


கடந்த மாதம் ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரையின் படி கட்சியிலிருந்து மானியம் ஆடூர் மெஹராஜுதீன் நீக்கப்பட்டதற்கான காரணங்களை கழக செயல் வீரர்களுக்கு தலைமை நிர்வாகிகள் தகுந்த ஆதாரத்துடன் விளக்கினர்.




மேலும் எதிர்வரும் ஜுலை 6 பேரணிக்கு மாவட்டத்திலிருந்து பெருமளவு மக்கள் திரளை திரட்ட வேண்டியதற்கான வியூகங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

தற்சமயம் மாவட்ட நிர்வாகம் கலைக்கப்பட்டுள்ளதால் மாவட்ட அமைப்புக் குழு உருவாக்கப்பட்டு கீழ் கானும் சகோதரர்கள் அதன் உறுப்பினர்களாக தேர்வு செய்யப் பட்டுள்ளனர். 

லால்பேட்டை அய்யூப்
கொள்ளுமேடு நஸ்ருல்லா
எள்ளேரி ஷாஜஹான்
பரங்கிப்பேட்டை ஹஸன் அலி 
சிதம்பரம் அமீர் பாஷா
லால்பேட்டை யாசிர் அரபாத்
ஆயங்குடி அப்துல் பாஸித்

மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை இந்த குழு லால்பேட்டை அய்யூப் அவர்களது தலைமையில் செயல்படும் என்று பொதுக்குழுவில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.


- தகவல்:கொள்ளுமேடு எம்.ஐ.நஸ்ருல்லா

0 கருத்துகள்:

கருத்துரையிடுக