பர்மாவில் முஸ்லீம்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் நெய்வேலி அருகே மந்தாரக்குப்பத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
இலங்கையில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யபட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், பர்மாவில் முஸ்லீம்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் நெய்வேலி அருகே மந்தாரக்குப்பத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு த.மு.மு.க.மாவட்ட செயலாளர் ஷேக் தாவூத் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஜாபர்அலி முன்னிலை வகித்தார். மாநில மாணவரணி இணை செயலாளர் ஆரூன்ரஷித், அமைப்பு செயலாளர் ஜெயின்ஸ் ஆபுஜீன், மாணவர் இந்தியா மாநில செயலாளர் சர்வத்கான் மனித நேய கட்சி நகர செயலாளர் ஜலால் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
கலந்து கொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் தஞ்சாவூரில் இருந்து வாகனங்களில் பேரணியாக சென்று வருகிற 29–ந்தேதி கச்சத் தீவினை மீட்ககோரி ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அறிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ஷாஜகான், வர்த்தக அணி செயலாளர் கைதர்அலி, முகமது மைதீன், சாதிக்அலி, மன்சூர், ஜாகிர்உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக