AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 24 ஏப்ரல், 2013

வீராணம் ஏரி தூர்வார அளவீடு பணி தீவிரம்

காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரி காட்டுமன்னார்கோவில், குமராட்சி, சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதி விவசாய நிலங்கள் பாசனம் பெற ஏதுவாக உருவாக்கப்பட்டது. ஏரியின் கீழ் கரையில் 28 பாசன மதகுகளும், மேற்கரையில் 6 மதகுகளும் என 34 மதகுகள் உள்ளன. இதன் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன.  
மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு திறந்து விடப்படும் நீர் கல்லணை வழியாக கீழணையை வந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வந்து சேரும். மழை காலங்களில் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, பாப்பாக்குடி வடிகால் ஆகிய ஓடைகளின் வழியாக ஏரிக்கு நீர் வரத்து வரும்.


இப்பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாட்கள் அடைமழை பெய்தால் மேலே குறிப்பிட்ட ஓடைகளின் வழியாக விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்தடையும். ஏரியின் பாதுகாப்பு கருதி சேத்தியாத்தோப்பு அணை கட்டின் மூலம் வெள்ளாற்றில் வெள்ள நீர் அனுப்பப்படுகிறது. ஆனால் தற்போது வீராணம் ஏரி வண்டல் மண் படிந்து தூர்ந்து காணப்படுகிறது. ஏரியை ஆழப்படுத்த விவசாய சங்கங்கள் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. 
இந்நிலையில் தமிழக அரசு வீராணம் ஏரியை ஆழப்படுத்த மீண்டும் 40 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 
இதையடுத்து பொது பணித்துறை சார்பில் வீராணம் ஏரியில் தூர்வார முதல் கட்ட அளவு பணி நேற்று தொடங்கப்பட்டது. இதில் 40 கோடி போதுமானதாக இல்லாததால் குறிப்பிட்ட சில இடங்களில் ஏரியில் தூர்வார முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக