கடலூர் : பிப்-01
கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள் ளாட்சி அமைப்புகளில் இயற்றப்பட்ட தீர்மானங்களின் கருத்துக்கள் இன்று முதல் செயல்முறைக்கு வருகிறது. இது குறித்து கலெக்டர் கிர்லோஷ்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 683 கிராம ஊராட்சிகளில் பிளாஸ்டிக் கேரி பைகளினால் ஏற்படும் தீய விளைவுகளை தடுக்கும் பொருட்டும் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் பொருட்டும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் தானாக முன்வந்து தீர்மானங்களை இயற்றியுள்ளன.
/
கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் பிளாஸ்டிக் கேரி பைகளை தடை செய்வது ஒருமித்த கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் இயற்றப்பட்ட தீர்மானங்களின் சாராம்சம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் பிளாஸ்டிக் கேரி பைகளை தடை செய்வது ஒருமித்த கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் இயற்றப்பட்ட தீர்மானங்களின் சாராம்சம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
/
கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் இயற்றப்பட்ட தீர்மானங்களின் கருத்துக்கள் இன்று முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் இயற்றப்பட்ட தீர்மானங்களின் கருத்துக்கள் இன்று முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.
/
எந்த ஒரு நபரும் விற்பனையாளர், பெட்டிக்கடைக்காரர், சில்லரை வணிகர், மொத்த விற்பனையாளர் மற்றும் அனைத்து வகை வர்த்தகர்கள் தள்ளுவண்டி வியாபாரிகள் உட்பட, உணவு பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் சேகரிப்பதற்காகவோ, சுமப்பதற்காகவோ, வழங்குவதற்காகவோ அல்லது பொருட்களை கட்டுவதற்காகவோ பிளாஸ்டிக் கேரி பைகளை உபயோகிக்க கூடாது.
எந்த ஒரு நபரும் விற்பனையாளர், பெட்டிக்கடைக்காரர், சில்லரை வணிகர், மொத்த விற்பனையாளர் மற்றும் அனைத்து வகை வர்த்தகர்கள் தள்ளுவண்டி வியாபாரிகள் உட்பட, உணவு பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் சேகரிப்பதற்காகவோ, சுமப்பதற்காகவோ, வழங்குவதற்காகவோ அல்லது பொருட்களை கட்டுவதற்காகவோ பிளாஸ்டிக் கேரி பைகளை உபயோகிக்க கூடாது.
/
மேலும் எந்த ஒரு நபரும் பிளாஸ்டிக் கேரி பைகளை தயாரிக்கவோ, இறக்குமதி செய்யவோ, இருப்பில் வைப்பதோ, விற்பனை செய்வதோ, எடுத்துச் செல்லவோ தடை செய்யப்பட்டுள்ளது.
எந்த ஒரு நபரும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டீ கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர், குடிநீர் பாக்கெட்டுகள், அன்பளிப்பு பிளாஸ்டிக் அலங்கார உறைகள், அல்லது பிளாஸ்டிக் ஷீட் அனைத்தும் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் எந்த ஒரு நபரும் பிளாஸ்டிக் கேரி பைகளை தயாரிக்கவோ, இறக்குமதி செய்யவோ, இருப்பில் வைப்பதோ, விற்பனை செய்வதோ, எடுத்துச் செல்லவோ தடை செய்யப்பட்டுள்ளது.
எந்த ஒரு நபரும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டீ கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர், குடிநீர் பாக்கெட்டுகள், அன்பளிப்பு பிளாஸ்டிக் அலங்கார உறைகள், அல்லது பிளாஸ்டிக் ஷீட் அனைத்தும் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.
/
எனவே தடை செய்யப்பட்ட இனங்களை மீறி செயல்படுவோர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மொத்த விற்பனையாளருக்கு 10 ஆயிரம் ரூபாயும், சில்லரை வியாபாரிகளுக்கு 1000 ரூபாய், சாலையோர வியாபாரிகளுக்கு 200ம், உபயோகிப்பவர்களுக்கு 100ம் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எனவே தடை செய்யப்பட்ட இனங்களை மீறி செயல்படுவோர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மொத்த விற்பனையாளருக்கு 10 ஆயிரம் ரூபாயும், சில்லரை வியாபாரிகளுக்கு 1000 ரூபாய், சாலையோர வியாபாரிகளுக்கு 200ம், உபயோகிப்பவர்களுக்கு 100ம் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக