AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வெள்ளி, 21 டிசம்பர், 2012

இ.யூ. முஸ்லிம் லீக் பிரம்மாண்ட பேரணி மகாராஷ்டிரா முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தனர்


மகாராஷ்டிரா மாநில சிறைகளில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுவிக்கக் கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாகபுரியில் பிரம்மாண்டப் பேரணியை நேற்று (19-ம் தேதி) நடத்தி யது. அதில் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பி னரும், முஸ்லிம் லீக் தேசிய துணைச் செயலாளருமான அப்துல் பாஸித் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
ஆய்வறிக்கை
மகாராஷ்டிர மாநில மைனாரிடி கமிஷன் சமீபத்தில் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயன்ஸ் (டி.ஐ. எஸ்.எஸ்.) என்னும் நிறுவனத் தாரிடம், மகாராஷ்டிரா மாநில சிறைச்சாலைகளில் அடைபட் டுள்ள கைதிகள் குறிப்பாக முஸ்லிம் கைதிகள் பற்றிய விவரங்களைச் சேகரித்துத் தரும் பொறுப்பை ஒப்படைத் தது.
அந்த நிறுவனத்தைச் சேர்ந்த கிரிமினாலஜி எனப்படும் குற்றச் சட்டயியல் மற்றும் நீதித்துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் விஜய் ராகவன், ரோஸ்னி நாயர் இருவரும் அந்தப் பொறுப்பை ஏற்று, ஓராண்டு காலம் ஆய்வு நடத்தி அறிக்கை அளித்தனர்.

70 சதவீத விசாரணைக் கைதிகள்
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 15 சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லிம் கைதிகளில் 70 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள். இவர்களில் ஆண் கள் 64.5 சதவீதம்; பெண்கள் 5.2 சதவீதம் பேராவர். இவர்களில் 47.4 சதவீதம் பேர் மீது மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 3.8 சதவீதம் பேர் மீதுள்ள வழக்குகள் மட்டுமே தீர்ப்பு கூறப்படும் அளவுக்கு வந்திருக் கிறது.
மகாராஷ்டிரா சிறைச்சாலை களில் உள்ள மொத்த கைதி களில் முஸ்லிம் கைதிகள் மட்டுமே 65.5 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் யாவரும் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட வர்களாவர். இவர்களில் 58.2 சதவீதம் பேர் ஆரம்ப பள்ளிப் படிப்பு அளவு படித்துள்ளனர்; மீதமுள்ள 31.4 சதவீதம் பேர் எழுதப் படிக்கத் தெரியாதவர் களாக இருக்கிறார்கள்.
பெண் கைதிகள்
பெண் கைதிகளில் பெரும் பான்மையானவர்கள் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள்.
சிறையில் உள்ள 96 சதவீதம் முஸ்லிம் கைதிகளுக்கு எந்த வொரு தீவிரவாதக் கும்பலு டனோ, கிரிமினல் கும்பலுடனோ தொடர்பு எதுவும் இல்லை. 50 சதவீதம் பேருக்கு 2013ல் தண்டனை காலம் முடிகிறது. 38 சதவீதம் பேர் தாங்கள் கைதான தைத் தங்கள் குடும்பங்களுக் குத் தெரிவிக்க காவல்துறை யினர் உதவவில்லை. பல பேர், எந்தக் குற்றமும் செய்யாமல் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏதாவது ஒரு குற்றத்தைப் பார்த்ததாக சாட்சி சொல்ல முன்வராததாலும், ஒரு குடும் பத்தில் உள்ள ஒருவர் குற்றம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டால், அவருக்குப் பதிலாக அந்தக் குடும்பத்தில் உள்ள இன்னொ ருவர் கைது செய்யப்பட்டுள்ள னர்.
கண்டனப் பேரணி
இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகளுக்கு நியாயம் வழங்கக் கோரியும், அப் பிராணிகளை விடுவிக்க வேண்டியும், விதர்பா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நேற்று நாக்பூரில் பிரமாண்டப் பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியின் இறுதி யில் அம் மாநில முதல்வரிடம் இது குறித்து மனு ஒன்றை அளித்தனர்.
பேரணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய துணைச் செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பின ருமான ஆம்பூர் அப்துல் பாஸித், நாக்பூர் சமீம் சாதிக், மகாராஷ் டிர மாநிலத் தலைவர் சமீயுல் லாஹ் அன்சாரி, முஸ்லிம் லீக் மாநகராட்சி கவுன்சிலர்கள் நாக்பூர் அஸ்லம் முல்லா, அமரா வதி இம்ரான் அஸ்ரபீ, மும்பை மாநகர் செயலாளர் சி.ஹெச். அப்துல் ரஹ்மான், மாநிலச் செய லாளர் செய்யது அஸ்ரப் அலி, குலாம் நபி, ஜுபைர்கான் உள்ளிட்ட நிர்வாகிகளும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பேரணியில் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக