AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 29 டிசம்பர், 2012

டிசம்பர் 30ல் மது ஆலைகள், டாஸ்மாக் கடைகள் முற்றுகை! மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு


மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, மது-மதுக் கடைகளுக்கு எதிரான தொடர் பரப்புரை டிசம்பர் 20 அன்று தொடங்கியது. டிசம்பர் 30வரை நடைபெறும் இத்தொடர் பரப்புரை, மதுவின் தீமையை விளக்கி நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை துண்டுப் பிரசுரம் வினியோகம், சுவரொட்டி மற்றும் சுவர் எழுத்து பரப்புரை, வாகனப் பரப்புரை, வீதிமுனைக் கூட்டங்கள், குறுந்தகடு வினியோகம் என பல்வேறு வடிவங்களில் பரப்புரை நடைபெறுகிறது.

ஒரு கோடி மக்களிடம் மதுவின் தீமை குறித்தும் பூரண மதுவிலக்கின் அவசியம் குறித்தும் பரப்புரை செய்வது இலக்காகக் கொண்டு பரப்புரை நடந்து வருகிறது.
இந்த பரப்புரைக்கு பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இறுதியாக டிசம்பர் 30 அன்று தமிழகமெங்கும், மதுபான ஆலைகள் மற்றும் மதுபான வினியோக மையங்கள் அல்லது டாஸ்மாக் மதுக்கடைகளை முற்றுகையிடும் அறப்போராட்டம் நடைபெற உள்ளது.

இவண்,
(ஜே.எஸ்.ரிபாயீ)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக