AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 4 நவம்பர், 2012

‘குறி வைக்கப்படும் முஸ்லிம் சமூகம் – நீதிக்கான முழக்கம்’ – சென்னை மற்றும் மதுரையில் இன்று மாநாடு!


சென்னை: ‘குறிவைக்கப்படும் முஸ்லிம் சமூகம் – நீதிக்கான முழக்கம்’ என்ற தலைப்பில் சென்னை-மதுரை ஆகிய இரு நகரங்களிலும் இன்று  (நவ.4) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநாடுகளை நடத்துகிறது. மக்களை சந்திப்போம்! உண்மையை சொல்வோம்! என்ற முழக்கத்துடன் இம்மாநாடுகள் நடைபெறுகின்றன.
சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளை விடுதலை செய்யக் கோரியும், மக்கள் விரோத கருப்புச் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், நாட்டின் அனைத்து மக்களும் அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அனுபவிக்கவும், சமூகத்தில் கீழ் நிலையில் உள்ள மக்களை சக்திப்படுத்திடவும், இந்த மாநாடுகள் நடத்தப்படுகின்றன.

குறிப்பாக 65 ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டு கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தினை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு அனைவரும் பேராதரவு தரவேண்டும் என, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநிலத் தலைவர், A.S.இஸ்மாயீல் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 21ந்தேதி கோவையிலும், மாநாடு நடத்தப்பட்டது. மேலும் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் இம்மாநாடுகள் நடைபெற்று வருகின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக