முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வகையில் திரைப்படம் தயாரித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகமது நபியை கேவலமாக சித்தரித்து அமெரிக்காவில் வெளியான Innocence of Muslim திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் திரைப்படத்தை தயாரித்த நகௌலா பஸ்ஸெல்லி நகௌலா(வயது 55) என்பவர் அமெரிக்க பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நபருக்கு பிணை வழங்க, நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
நகௌலாவுக்கு உலக அளவில் பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால், பிணை வழங்க முடியாதென நீதிபதி தெரிவித்துள்ளதுடன், அவரை சிறையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக