AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 17 ஜூலை, 2012

சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவிடம் மனு அளிக்கலாம்

 காட்டுமன்னார்கோவில் பகுதியில் வசிக்கும் மக்கள், சங்கங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் சார்பில்  தங்களுடைய குறைகளை மனுக்களாக எழுதி `தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, சென்னை` என்ற முகவரிக்கு இந்த மாதம் 31ம் தேதிக்குள் அனுப்ப மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்ததாக வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மனுக்கள் பொது பிரச்சனைகள் குறித்தும், அரசு அலுவலகங்களில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக் கும் பிரச்சனை உள்ளடக்கியதாகவும், ஒரே ஒரு துறையை சார்ந்ததாகவும் இருக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது. இதில் தனிநபர் குறை நீதிமன்ற வழக்கு சம்மந்தப்பட்டவை, வேலைவாய்ப்பு, பட்டா, முதியோர் உதவிதொகை, வங்கி கடன், தொழில் கடன், அரசு பணிமாற்றம், அரசு அலுவலர்களின் குறைகள் ஆகியவை பற்றி மனுக்களாக அனுப்பக்கூடாது. சட்டமன்ற பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்டு மனுக்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். மனு பற்றிய விவரங்கள் மனுதாரருக்கு தெரிவிக்கப் படும் ஆகவே மனுதாரர்கள் அரசு விதிகளுக்குட்பட்டு மனுக் களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக