AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 2 ஜூலை, 2012

ஜாமியா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இறைவன் அருளால் மிகச்சிறப்புடன் நடந்தது.


லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 68 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா 01.07.2012 காலை 9.30 மணியளவில் தொடங்கியது. விழா நடைப்பெற்ற தாருத் தஃப்சீர் அரங்கம் காலை முதலே மக்கள் வெள்ளாத்தால் நிரம்பியிருந்தது.விழாவிற்கு ஜாமிஆவின் தலைவர் ஹாஜி.பி.எம்.முஹம்மது ஆதம் தலைமை வகித்தார்.ஜாமிஆவின் செயலாளர் ஹாஜி.பி.எம்.முஹம்மது எஹ்யா வரவேற்றார்.பட்டம் பெற்ற இளம் ஆலிம்களை வாழ்த்தியும் மார்க்க கல்வியின் அவசியம் குறித்தும் சென்னை அடையார் பெரியபள்ளியின் தலைமை இமாம் எம்.சதீதுத்தீன் பாகவி, இலங்கை மார்க்க அறிஞர் அய்.எம்.முஹம்மது முபாரக் ஆகியோர் பேசினர்.
பெங்களூர் ஸபீலுர் ரஷாத் அரபிக் கல்லூரியின் முதல்வரும் கர்நாடக அமீரே ஷரியத் மெலானா முஃப்தி அஷ்ரப் அலி ஹஜ்ரத் பட்டமளிப்பு பேருரை நிகழ்த்தினார்.விழாவில் ஜாமிஆவின் பேராசிரியர்கள் நாயிப் முஃப்தி அல்லாமா எஸ்.ஏ.அப்துர் ராப் ஹஜ்ரத்,ஷைகுல் ஹதீஸ் மெலானா அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத்,உள்ளிட்ட அனைத்து பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.ஜாமிஆவின் முதல்வர் சத்ருல் முதர்ரிஸீன் முஃப்தி ஏ. நுருல் அமீன் ஹஜ்ரத் சனது வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக