காட்டுமன்னார்கோவில் அருகே மேற்கூரை இல்லாத பயணியர் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே விளத்தூர் கிராமம். இங்கு பேருந்து நிழற்குடை மேற்கூரையின் தகரம் இல்லாததால் பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் போது அவதிப்படுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் பேருந்துகளில் பயணம் செய்வதற்காக பயணிகள் காத்திருப்பதற்காக நிழற்குடைகள் அமைத்துள்ளனர். பெரும்பாலான கிராமங்களில் இந்த நிழற்குடைகளில் ஒரு சிலர் ஆக்கிரமித்து படுத்து உறங்குகின்றனர். சில கிராமங்களில் அமைக்கப்பட்ட நிழற்குடைகள் சேதமடைந்து பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதே போன்று விளத்தூரில் பேருந்து நிழற்குடையின் மேல்பகுதி சேதமடைந்துள்ளது.
இதனால் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேரத்தில் சில தடவை மட்டுமே வரும் பேருந்துக்காக பல மணி நேரம் காத்திருக்கும் பொதுமக்கள் அமரக்கூட முடியாமல் அவதியுறுகின்றனர்.
ஆகவே சேதமடைந்த நிழற்குடையை சீர்செய்ய வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் வேண்டுகோளாகும்.
காட்டுமன்னார்கோவில் அருகே விளத்தூர் கிராமம். இங்கு பேருந்து நிழற்குடை மேற்கூரையின் தகரம் இல்லாததால் பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் போது அவதிப்படுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் பேருந்துகளில் பயணம் செய்வதற்காக பயணிகள் காத்திருப்பதற்காக நிழற்குடைகள் அமைத்துள்ளனர். பெரும்பாலான கிராமங்களில் இந்த நிழற்குடைகளில் ஒரு சிலர் ஆக்கிரமித்து படுத்து உறங்குகின்றனர். சில கிராமங்களில் அமைக்கப்பட்ட நிழற்குடைகள் சேதமடைந்து பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதே போன்று விளத்தூரில் பேருந்து நிழற்குடையின் மேல்பகுதி சேதமடைந்துள்ளது.
இதனால் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேரத்தில் சில தடவை மட்டுமே வரும் பேருந்துக்காக பல மணி நேரம் காத்திருக்கும் பொதுமக்கள் அமரக்கூட முடியாமல் அவதியுறுகின்றனர்.
ஆகவே சேதமடைந்த நிழற்குடையை சீர்செய்ய வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் வேண்டுகோளாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக