AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 11 ஏப்ரல், 2012

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் – சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி!


சென்னை:இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் இன்று மதியம் சுமார் 2.15 மணியளவில் இந்த  நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவானதால் நிலநடுக்கம் மிகக் கடுமையாக உணரப்பட்டது.
இதன் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,உதகை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. சென்னையில் அண்ணாசாலை,மந்தைவெளி, மைலாப்பூர், எழும்பூர், ஆழ்வார்ப்பேட்டை போன்ற பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து  வீடுகளை விட்டு வெளியேறினர்.
காஞ்சிபுரம் மாவட்டத்திலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. கட்டடங்கள், வீடுகளில் இருந்த சேர்கள், டேபிள்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு  வெளியேறினர்.
கட்டிடங்கள் குலுங்கியதால் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்தோர் பீதியடைந்து  வெளியே ஓடிவந்தனர். அதேப்போன்று ஊட்டியிலும் நில அதிர்வு உணரப்பட்டது.இதனிடையே தமிழகம் தவிர்த்து இந்தியாவில் புவனேஸ்வர், கொல்கத்தா,டெல்லி மற்றும்  அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட இடங்களிலும் இந்த நிலநடுக்கம்  உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே நிலநடுக்கம் ஏற்பட்ட இந்தோனேஷியா, இந்தியா, இலங்கை, மலேசியா  உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்தமான்   தீவுகளில் சுனாமி தாக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சுமத்ரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் அந்தமான் தீவுகளில் உள்ள கடற்கரை பகுதிகளில் உஷார் நிலையில் இருக்கும் படி எச்சரிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக