AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 4 மார்ச், 2012

குஜராத் இனப்படுகொலை: பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் பரிதாப நிலை!


அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப் படுகொலைக்கு பிறகு நிவாரண நடவடிக்கைகளில் மோடி அரசு காட்டிய அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியாக நசிந்து போனதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத, நகரங்களில் இருந்து மிக தொலைவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில்தான் பெரும்பாலான மக்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் ஒதுங்கிவிட்டதாக குஜராத்தின் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜன்விகாஸின் சர்வே கூறுகிறது.
எட்டு மாவட்டங்களில் 83 மறுவாழ்வு காலனிகள் வசிக்கும் 16,087 இனப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்திய சர்வேயில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 2002- ஆம் ஆண்டு இனப் படுகொலைக்கு முன்பு அவர்கள் வசித்த பகுதிகளுக்கு திரும்பவில்லை. அண்டை வீடுகளில் வசிக்கும் மக்களின் மிரட்டல் உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இனப் படுகொலையின் போது வீடும், வியாபார நிறுவனங்களும் இழந்த முஸ்லிம்களுக்கு புதிய இடங்களில் வியாபாரம் துவங்க மூலதனம் இல்லை. எப்பாடு பட்டேனும் ஏதாவது வியாபாரத்தை துவக்கினாலும் வியாபாரம் குறைந்ததால் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
காலனிகள் நகரங்களில் இருந்து மிகவும் தொலைவில் உள்ளன. இதனால் வியாபாரம் குறைந்துள்ளது. இதனால் வருமானத்தில் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரையிலான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசோ அல்லது அரசு சாரா நிறுவனங்களோ ஒரு வீடு கூட கட்டிக் கொடுக்கவில்லை. முஸ்லிம் அறக்கட்டளை நிறுவனங்கள்தாம் வீடுகளை கட்டியுள்ளன. ஆனால், காலனிகளில் முஸ்லிம்களுக்கு ஆவணங்கள் மூலம் உரிமையாளர்களுக்கான சான்றிதழ் வழங்கப்படவில்லை.
33 சதவீத காலனிகளில் போதுமான அளவு சுத்தமான குடிநீர் வசதி இல்லை. 81 சதவீதம் பேருக்கு சாக்கடை நீர் செல்வதற்கான வசதி இல்லை. 86 சதவீதம் காலனிகளிலும் சாலைகள் இல்லை. தொலைதூரத்தில் உள்ள கிராமங்களில் 34 காலனிகளில் வெறும் 5 இல் மட்டுமே தேசிய கிராமீய சுகாதார திட்டத்தின் மூலமாக இன்சூரன்ஸ் கார்டு கிடைத்துள்ளது. 55 சதவீத காலனிகளுக்கு அருகில் அங்கன்வாடிகள் கிடையாது.
வேகமான நடவடிக்கைகள் மூலம் குஜராத் இனப் படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் வசிக்க செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று மோடி அரசு அடிக்கடி அறிவித்தபோதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாநில அரசு தங்களது நிலைமையை மாற்ற எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று இனப் படுகொலையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக