AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 29 மார்ச், 2012

எதிர்பார்ப்புகளை ஏமாற்றியது பட்ஜெட் ,மனிதநேய மக்கள் கட்சி


மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
தமிழக அரசின் சார்பில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2012&2013ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வருடந்தோறும் சமர்ப்பிக்கப்படும் மற்றொரு பட்ஜெட் என்ற அளவிலேயே உள்ளது.
பாராட்டப்பட சில அம்சங்களும், வருத்தமளிக்கும் சில அம்சங்களும் சமஅளவில் கலந்திருக்கின்றன.

வரவேற்கத்தக்க விஷயங்களாக:
மாநில பேரிடர் மீட்பு படை அமைத்தல்
1 லட்சம் வீட்டு மனை பட்டாக்கள் வழங்குதல்
சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் பள்ளி கல்வித் துறைக்கு வழங்குதல்
100 பின்தங்கிய வட்டாரங்களும் மற்றும் பின்தங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் கண்டறியப்பட்டு குறைகளைப் போக்கிட மாநில அரசு சரிநிகர் வளர்ச்சி நிதியாக 100 கோடி ஒதுக்கீடு செய்தல்
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்லூரி விடுதிகளுக்கு கட்டில்கள் வழங்குதல்
உலமா வாரியத்திற்கு 1 கோடி ரூபாய் வழங்குதல்
ஜெருசலம் செல்லும் யாத்ரீகர்களுக்கு 1 கோடி ரூபாய் மானியம் வழங்குதல்
25 கோடி ரூபாய் செலவில் தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு 2500 வீடுகள் கட்டித்தருதல்
- போன்ற அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை. அதேநேரம்,
கடுமையான விலை உயர்வு மக்களை வாட்டக்கூடிய நிலையில் சமையல் எண்ணெய்க்கு 5 சதவீதமாக மதிப்புக்கூட்டு வரியை உயர்த்தியது ஏற்க முடியாதது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அவதிக்குள்ளாவார்கள்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு உயர்த்தி தரப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதுகுறித்து பட்ஜெட்டில் எதுவும் அறிவிக்கப்படாதது மிகுந்த வேதனையையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டைப் போக்கிட உடனடியாக செயல்திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.
கூடங்குளம் அணுஉலை எதிராக மக்கள் போராடும் நிலையில், அமைச்சரவை எடுத்த முடிவு குறித்த பின்னணி பற்றியும், அம்மக்களுக்காக அறிவித்த 500 கோடி ரூபாய் சிறப்பு திட்டம் குறித்த விவரங்களை நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.
சென்னை போன்ற மாநகரப் பகுதிகளில் சிறுபான்மை முஸ்லிம் மாணவர்கள் தங்குவதற்கான விடுதிகளுக்கு நிதியுதவி ஒதுக்கப்படாதது வருத்தமளிக்கிறது.
மொத்தத்தில் இதுபோன்ற பல எதிர்பார்ப்புகளைப் பொய்ப்பித்து ஏமாற்றத்தை அளிக்கும் விதத்திலேயே இந்த நிதிநிலை அறிக்கை இருக்கிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக