குவைத்சிட்டி:தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு குவைத் அமீர் ஷேக் ஸபாஹ் அல் அஹ்மத் அல் ஸபா 1656 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இவர்களில் 81 பேர் பெண்கள் ஆவர். 370 பேர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவர். 1,181 பேருக்கு தண்டனையில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 105 சிறைக்கைதிகளுக்கு நாடு கடத்தல் தண்டனை ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் பொருளாதார குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் 11 மில்லியன் டாலர் தொகை தள்ளுபடிச் செய்யப்பட்டுள்ளது. சிறையில் இருந்து விடுதலையாகும் 370 பேரில் உள்நாட்டைச் சார்ந்த 74 ஆண்களும், இரண்டு பெண்களும் உள்ளனர். தண்டனையில் சலுகை கிடைக்கும் 1181 பேரில் உள்நாட்டைச் சார்ந்த 335 ஆண்களும், 26 பெண்களும் உள்ளனர். நாடு கடத்தல் தண்டனை ரத்துச் செய்யப்படும் கைதிகள் 105 பேரில் ஒரு பெண்மணி இடம் பெற்றுள்ளார்.
தேசிய தின கொண்டாட்டத்தையொட்டி எல்லா வருடமும் மனித நேயத்தின் அடிப்படையில் அமீர் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது வழக்கமாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக