புதுடெல்லி: இந்தியாவின் மின்சாரத் தேவையை சமாளிக்க அணு மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வகையான மின் உற்பத்தியும் தேவை என புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கான மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளால், அணு மின்சாரம் இல்லாமல் சமாளிக்க முடியும் என்று தெரிவித்த அவர், இந்தியா போன்ற வளரும் நாடு அவ்வாறு இருக்க முடியாது என்று கூறினார். கோவையில் சர்வதேச காற்றாலைகள் மாநாடு மற்றும் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசும்போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். இந்தியாவின் மின் தேவைகளை சமாளிக்க மின்சாரத்தை உற்பத்தி செய்ய புதிய முறைகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். இதன் ஒரு பகுதியாக கடல் அலைகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் சாத்தியகூறுகள் குறித்து தற்போது ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.
திங்கள், 6 பிப்ரவரி, 2012
இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு அணு மின்சாரம் தேவை : ஃபரூக் அப்துல்லா
லேபிள்கள்:
kollumedutimes
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக