AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 10 ஜனவரி, 2012

பரங்கிப்பேட்டையில் தமுமுக சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது









கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தையும், பாண்டிச்சேரியையும் கடுமையாகத் தாக்கிய தானே புயல் காரணமாக இந்த இரண்டு மாவட்டங்களும் கடுமையான சேதத்திற்கு உள்ளாயின. கடும் சீற்றத்துடன் வீசிய காற்று அங்கிருந்த மக்களின் வீட்டுக்கூரைகளைப் பிய்த்து எறிந்தது. காற்றின் வேகம் காரணமாக கடலூர் மற்றும் பாண்டி ஆகிய பகுதிகளில் இருந்த அதிகமான மரங்கள் வேறோடு சாய்ந்தன. இவ்வாறு சாய்ந்த மரங்கள் பெரும்பாலாணவை வீடுகள் மீது விழுந்ததால் பெரும்பாலான வீடுகள் இடிந்து விழுந்தன.   பரங்கிப்பேட்டை பகுதியில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. தானே புயல் காரணமாக இந்தப் பகுதியில் இருந்த குடிசை வீடுகள் அடியோடு சேதமடைந்தன. குடிசைகள் அப்படியே வீழ்ந்ததாலும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததாலும் அங்கிருந்த அனைத்துப் பொருட்கள் வீணாயின.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக