AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 15 டிசம்பர், 2011

பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் வழங்கும் உதவித் தொகை!!


தமிழகத்தில் பள்ளியில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை அளிக்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதன்படி, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.25ம், 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.40ம், 9 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.50ம் உதவித் தொகையாக வழங்கப்படும்.
விடுதியில் தங்கி பயிலும் 3 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ரூ.200ம், 9, 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ.250ம் தமிழக அரசு சார்பில் உதவித் தொகையாக வழங்கப்படும்.
விடுதி மாணவர்களுக்கு தனி மானியமாக ஆண்டுக்கு ரூ.500 வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக