AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 12 டிசம்பர், 2011

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு – முஸ்லிம்களை கவர ராகுல்காந்தி முயற்சி


லக்னோ:2012-ல் நடக்கவிருக்கும் மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு உத்தர பிரதேசத்திற்கு வந்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தேர்தலில் முஸ்லிம்களை கவருவதற்காக மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார். மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்கிற வாக்குறுதியை தாங்கள் காப்பாற்றுவோம் என்று மாநில தலைமை அலுவலகத்தில் கட்சி பிரதிநிதிகளிடம் கூறியதை அடுத்து அவருடைய இந்த கருத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
ராகுல் எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு தங்கள் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் வேட்பாளர்களை சந்திக்க உத்தர பிரதேசத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கட்சி பிரமுகர்களை சந்தித்த அவர் 20  வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் உத்தர பிரதேச மாநிலத்தில் தேர்தலில் போட்டியிட வலுவான நிலைக்கு வந்துள்ளதாகவும் கடந்த 1991 முதல் 2007  வரை கிட்டத்தட்ட நாம் போட்டி களத்திற்கு வெளியில் இருந்துள்ளோம் என்றும் 2007 முதல் மாநில பிரச்சனைகளில் தனது நேரடி பார்வை இருந்து வருகிறது என்பதையும் நினைவுக் கூர்ந்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக