AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 22 டிசம்பர், 2011

மமக நடத்தும் ‘உள்ளாட்சித் தேர்தல் வெற்றி & அரசியல் எழுச்சி‘ பொதுக்கூட்டம்! டிச.25இல் நடைபெறுகிறது!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்அரசியல் பிரிவான மனித நேய மக்கள் கட்சியின் சார்பில், உள்ளாட்சித் தேர்தல் வெற்றி & அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் 25.12.2011 அன்று இரவு 07.00 மணிக்கு, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெறுகிறது. 

தமுமுக மற்றும் மமக நகரத் தலைவர் எம்.கே.ஜாஹிர் ஹுஸைன் தலைமை தாங்குகிறார். மமக மாவட்டச் செயலாளர் பீரப்பா, தமுமுக மாவட்டச் செயலாளர் நவாஸ், ஹாங்காங் தமுமுக நிர்வாகி ஹாஜா அரபி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். 

மமக மாவட்டத் தலைவர் ஆஸாத் வரவேற்புரையாற்றுகிறார். தமுமுக மாநில துணைச் செயலாளர் எம்.தமீமுன் அன்சாரி, மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத், மாநில செயற்குழு உறுப்பினர் என்.ஏ.தைமிய்யா ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். 

நகர தமுமுக செயலாளர் ஃபிர்தவ்ஸ் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொள்ளுமாறு மனித நேய மக்கள் கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.   மமகவின் உள்ளாட்சி தேர்தல் வெற்றி பொதுக்கூட்டம் இறைவனின் உதவியால் சிறப்பாக நடக்க வாழ்த்துகிறேன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக