தேனில் பல மருத்துவ குணங்கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவற்றுள் சிலவற்றை காண்போமா??
மலச்சிக்கலைப் போக்கும். குழந்தைகள் தினந்தோறும் அருந்தினால் கால்சியம், மக்னீஷியம் அளவு அதிகமாகி நல்ல வலிவைத் தரும். பாலுடன் கலந்து கொடுத்தால் இரத்தத்தில் `ஹீமோகுளோபின்’ அளவு அதிகமாகும்.
தினமும் படுக்கைக்குப் போகும் முன்பு ஒரு தேக்கரண்டி தேனை கொடுத்து வந்தால், தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் குணமாகி விடும்.
தேன் விரைவில் செரிப்புத் தன்மையை உண்டாக்கும். வயதானவர்களுக்கு ஏற்படும் தசைகளில் வலி, கால்கள், பாதங்களில் பிடிப்பு, முதலியன தேனை அருந்துவதால் நீங்குகிறது.
தேன் குடிங்க! ஹெல்தியா இருங்க!! :)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக