இங்கிலாந்தில் கடைகளில் மட்டுமின்றி கிளப்புகள் மது விடுதிகளில் தானியங்கி எந்திரங்களின் மூலம் சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. அந்த எந்திரத்திற்குள் ரூபாயை செலுத்தினால் அதற்குரிய சிகரெட் அதிலிருந்து தானாக வெளியே வரும்.
இந்த முறையிலான விற்பனையின் மூலம் இங்கிலாந்தில் தினமும் 80 லட்சம் பேர் சிகரெட் பிடிக்கின்றனர். அவர்களில் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் அடங்குவர். சிகரெட் பழக்கத்தால் குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. எனவே, அதை முடிவுக்கு கொண்டு வர இங்கிலாந்து அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதன்படி எந்திரம் மூலம் சிகரெட் விற்க தடை விதித்துள்ளது. கிளப்புகள் மற்றும் மது விடுதிகளில் எந்திரம் மூலம் சிகரெட் விற்றால் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதார செயலாளர் ஆண்ட்ரூ லான்ஸ்லீ தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக