அல் அய்ன் மண்டல தமுமுக சார்பில் எதிர் வரும் தியாகத் திருநாளின் சிறப்புகளை விளக்கி 28/10/2011 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பின்னர் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் அல் அய்ன் மஜியாத் கிளின்கோ கேம்ப்பில் நடைபெற்றது. மேலப்பாளையம் மவ்லவி பஷீர் பைஜி தலைமை தாங்கினார். லால்பேட்டை மவ்லவி பைஜூர் ரஹ்மான் திருக்குர்ஆன் விளக்கவுரை ஆற்றினார்.
துபை மண்டல தமுமுக முன்னாள் தலைவர் மதுக்கூர் அப்துல் காதர் அவர்கள் இறைத்தூதர் இப்ராஹீம் அவர்களின் தியாகத்தை விளக்கி உரை நிகழ்த்தினார். அமீரக தமுமுகவின் செயலாளர் யாசீன் நுருல்லாஹ் மமகவின் வளர்ச்சியை விளக்கி உரையாற்றினார்.அமீரக தமுமுகவின் துணை செயலாளர் டாக்டர் அப்துல் காதர் இயக்கம் தொடர்பாக சில அறிவிப்புகளை செய்தார்.
கிளின்கோ கேம்ப் கிளை தலைவர் ஹபீப் ரஹ்மான் நன்றியுரை நிகழ்த்தினார்.அல் அய்ன் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சகோதரர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.கிளின்கோ மஜியாத் கிளை சகோதரர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
துபை மண்டல தமுமுக முன்னாள் தலைவர் மதுக்கூர் அப்துல் காதர் அவர்கள் இறைத்தூதர் இப்ராஹீம் அவர்களின் தியாகத்தை விளக்கி உரை நிகழ்த்தினார். அமீரக தமுமுகவின் செயலாளர் யாசீன் நுருல்லாஹ் மமகவின் வளர்ச்சியை விளக்கி உரையாற்றினார்.அமீரக தமுமுகவின் துணை செயலாளர் டாக்டர் அப்துல் காதர் இயக்கம் தொடர்பாக சில அறிவிப்புகளை செய்தார்.
கிளின்கோ கேம்ப் கிளை தலைவர் ஹபீப் ரஹ்மான் நன்றியுரை நிகழ்த்தினார்.அல் அய்ன் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சகோதரர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.கிளின்கோ மஜியாத் கிளை சகோதரர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக