AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

மோடி VS அத்வானி பிரதமர் பதவியைக் குறிவைத்து ஒரு நாடகம்


மதநல்லிணக்கம், சமூக அமைதியை வலியுறுத்தி நரேந்திர மோடி மூன்று நாள் உண்ணாவிரதம் இருந்த செய்தி நடுநிலையாளர்களிடையே கடும் அதிருப்தியையும் கேலிச் சிரிப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.


இருபத்தோறாம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்தி 2002ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்து வரலாற்றில் அழியாத இழிவைப் பெற்றுவிட்ட நரவேட்டை நரேந்திர மோடியின் உண்ணாவிரதம் நாட்டு மக்களால் நகைப்புக்குரியதாக கருதப்பட்டதில் வியப்பில்லை. ஆடுகளுக்காக ஓநாய் ஒன்று கண்ணீர் வடிப்பதைப் போல இந்த செயல் அமைந்ததாக சமூக ஆர்வலர்கள் வேதனைத் தெரிவித்தனர்.

2002 பிப்ரவரி 28ஆம் தேதி நிகழ்ந்த இனப்படுகொலையில் குதறப்படும் கதறலுடன் குல்பர்க் என்ற குடியிருப்பினுள் புகுந்து அடைக்கலம் புகுந்த மக்களை பின்னால் விரட்டிச் சென்று சமூக விரோதிகள் அப்பாவி முஸ்லிம்களை படுகொலை செய்தனர். அடைக்கலம் தேடி வந்த மக்களைப் படுகொலை செய்ய முயன்ற பாதகர்களை தடுத்து நிறுத்தினார் கோத்ரா நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்சான் ஜாஃப்ரி.

கட்டுக் கட்டாக கரன்சி நோட்டுக்களை கலவரக்காரர் களின் முன் வைத்து இவற்றை எடுத்துக் கொண்டு அப்பாவிகளை விட்டு விடுங்கள் என்று கெஞ்சினார் இஹ்சான் சான் ஜாஃப்ரி. அவரது கெஞ்சலையும் உருக்கமான வேண்டுகோளையும் அலட்சியப்படுத்திய அந்த மனித மிருகங்கள் அந்த அப்பாவிகளைக் கொன்றதோடு அவர்களுக்கு ஆதரவாக புறப்பட்ட இஹ் ஜாஃப்ரியையும் துண்டு துண்டாக வெட்டிக் கொன்றும் அவரது ஆணுறுப்பையும் வெட்டி சிதைத்து நெருப்பில் போட்ட கொடூரமும் யாராலும் மறக்க முடியாதது.

இந்தக் கொடூரங்களுக்கு காரணமானவர்கள் மீதும், அந்த கொலைப்படையின் தலைவனும் குஜராத் முதல் அமைச்சருமான மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி உச்சநீதிமன்றத்தினை அணுகினார். அவரது நீண்ட சட்டப்போராட்டத்தின் விளைவாக அவரது முறையீட்டினை உச்சநீதி மன்றம் ஏற்றுக் கொண்டு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது.

அந்த சிறப்பு புலனாய்வுக்குழு முன் குஜராத் முன்னாள் புலனாய்வு காவல்துறை அதிகாரி சஞ்சீவ்பட் உள்ளிட்டவர்கள் அளித்த வாக்குமூலங்கள் நாட்டை யே அதிர்ச்சியடைய வைத்தது. மோடியின் கோர முகத்தை தோலுரித்துக் காட்டியது.

உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக்குழு விரைவில் அறிக்கையினை வெளியிட்டு உண்மைகளை உலகிற்கு வெளிப் படுத்தும் என எதிர்பார்த்த சூழலில் உச்சநீதிமன்றம் திடீரென ஓர் அறிவிப்பினை வெளியிட்டது. அதன்படி மோடி மீதான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தின் கீழ் வருவது மட்டுமே உச்சநீதிமன் றத்தின் வேலை அல்ல என்று அறிவித்ததோடு குஜராத் மாநிலத்தின் கீழ் நீதிமன்றம் விசாரிக்கும் என்றும் கூறினர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.

குஜராத் நீதிமன்றங்களின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் உச்சநீதிமன்ற அறிவிப்பு தனக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் கூறினார் நீதிக்காக வேண்டி போராடிய மூதாட்டி ஜாக்கியா ஜாஃப்ரி.  இருப்பினும் முழுமையான விசார ணைகளை செய்யும் பொறுப்பு உச்சநீதிமன்றத்தின் பணி அல்ல, கீழ் நீதி மன்றங்களின் பணியே என்றும் கருத்துக்கள் சொல்லப் பட்டன.

அகமதாபாத் கீழ் நீதிமன்றத்தின் விசாரணைகளை சிறப்பு புலனாய்வுக் குழு கண்காணிக்கும் என்ற  உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பு மோடியை பரிசுத்தமானவர் என்று கூறிடவில்லை என்று சட்டநிபுணர்களாலும் கற்றறிந் தவர்களாலும் தெளிவாக கூறப்பட்டது. இருப்பினும் மோடி ஆதரவு ஊடகங்கள் மோடியை இனக்கலவரங்களில் ஈடுபட்டவர் இல்லை என்றும், மனிதப்புனிதர் என்றும் உச்சநீதிமன்றமே புகழாரம் சூட்டிவிட்டதைப் போல போலியான பரப்புரைகளை பா.ஜகவில் உள்ள மோடி ஆதரவு முகாமும் சில அரை வேக்காட்டு ஊடகங்களும் பரப்பத் தொடங்கின. மோடியும் தான் உத்தமர் என்று உலகம் அறிவித்துவிட்டதைப் போலவே ஆர்ப்பாட்டம் செய்தார்.

ட்விட்டர் இணையதளத்தில் நிஷீபீ வீs நிக்ஷீமீணீt என்று ரொம்ப நல்லவர்போலும் பாவ காரியங் களை வாழ்க்கையில் ஒரு நாள் கூட செய்யாதவர் போலும் புனிதர் வேடம் போட்டார்.

உச்சநீதிமன்ற அறிவிப்பினை தனக்கு சாதகமானதாக காட்டிக் கொண்ட மோடியை உத்தமர் என்ற கனவுலகில் திளைக்க வைப்பதற்கான வேறொரு (கெட்ட) காரியமும் செப்டம்பர் ஒன்றாம் தேதி நடந்தது.

இந்தியாவின் மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளை மதிப்பீடு செய்கிறோம் என்று தம்பட்டம் அடிக்கும் அமெரிக்க காங்கிரஸனல் ரிசர்ச் சர்வீஸ் என்ற சுயேச்சையான அமைப்பு கொள்கை உருவாக்கம் தொடர்பாக பல்வேறு நாடுகளின் நிலைமையை ஆய்வு செய்து வருகிறதாம். இது அமெரிக்காவுக்கும் பல்வேறு நாடுக ளுக்கும் இடையிலான உறவுகளை நிர்ணயிப்பதில், தீர்மானிப் பதில் முக்கிய பங்குவகிக்கிறது.

அதாவது அமெரிக்காவின் நலனைக்காக்க எதிர்கால லட்சியம் குறித்து முடிவெடுக்க சி.ஆர்.எஸ் என்ற அமைப்பு சில ஆய்வுகளை வெளியிடும். அதன்படி, தற்போ தைய வெளியீட்டில் மோடி சிறந்த பொருளாதார மேதையாகவும், அடுத்த பிரதமராகவும் வர வாய்ப்புள்ள தலைவர் என்று அது தனது கணிப்பினை வெளியிட்டது.

அமெரிக்க காங்கிரசனல் ரிசர்ச் சர்வீஸின் அறிக்கை ஒன்றும் அபூர்வமான அறிக்கை அல்ல. இது வெறும் மாதாந்திர அறிக்கை மட்டுமே. இதற்கே மோடியின் ஆதரவு கும்பல் வானத்திற்கும் பூமிக்குமாக குதித்து ஆர்ப்பாட்டம் செய்தது.

மோடி மாபெரும் தலைவர்;  வருங்காலப்பிரதமர் என்றெல்லாம் கூச்சல்கள் எழுந்தன. அமெரிக்க காங்கிரஸின் இந்த அறிக்கைக்கு புதிதாக வியாக்கியானங்கள் வெளிப்பட்டு மோடியை வானளாவ உயர்த்த இப்போது என்ன அவசியம் வந்தது.?
மத உரிமைகளுக்கு எதிரான குற்றம் இழைத்தவர் எனக்கூறி மோடி அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

மோடியின் மீதான கறையைக் (!) களைய அமெரிக்காவில் சில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப் படுகிறது. அமெரிக்க காங்கி ரசனல் ரிசர்ச் சர்வீஸ் அறிவிப்பு செப்டம்பர் முதல்வாரம் வெளியாகிறது. மோடி தொடர் பாக உச்சநீதிமன்றத்தில் அறிவிப்பு வெளியானது, அதனை வைத்து உச்சநீதிமன்றமே தனக்கு புனிதர் பட்டம் வழங்கிவிட்டதாக தம்பட்டம் அடித்துக் கொண்டது, அதனைத் தொடர்ந்து உண்ணாவிரத நாடகம் போட்டது என அனைத்துக்கும் ஒரு வலுவான பின்னணி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

ஒரே ஒரு தடவை பிரதமர் பதவி சுகத்தை ருசித்து இனி என்றுமே அந்தப்பதவியை நெருங்க முடியாத பா.ஜ.கவில் ஏராளமான பிரதமர் வேட்பாளர்கள் காத்திருப்பு பட்டியலில் இருந்து வருகிறார்கள். பாப்ரி மஸ்ஜித் இடிப்புப் புகழ் அத்வானி முதல் பெல்லாரி சுரங்க மன்னர்களான ரெட்டிகளின் தோழி சுஷ்மாசு வராஜ், கர்ர்ப்ரேட்டுகளின் நண்பர் அருண்ஜேட்லி, போன்ற வர்களோடு ஓநாய் பார்வையோடு மோடியும் களத்தில் நிறுத்தப் பட்டார்.

ஆனால் அத்வானியை விட படுபயங்கர இமேஜ் கொண்ட மோடி மீது அக்கறை கொண்ட சில சக்திகள் மோடியின் பிம்பத்தின் மீது படிந்துள்ள இனக்கலவரம் என்ற இமேஜை மறைக்க, அதனை இந்திய மக்கள் மறக்கவும் மோடி திடீர் உண்ணாவிரதம் என்ற பெயரில் மூன்று நாள் நாடகத்தை அறிவித்து அதனை கடும் எதிர்ப்புகளுக்கும் ஆதரவாளர்களின் ஆரவாரங் களுக்கிடையே முடித்துக் கொண் டார். அவரது உண்ணாவிரதம் எடுபடாமல் போனது. எனினும் மோடியை பிரதமராக்கியே தீருவோம் என ஊடகபிற்போக்கு வாதிகளும் கார்ப்பரேட் கொள்ளையர்களும் முடிவு கட்டிக் கொண்டு செயல்பட்டனர்.

இருப்பினும் மோடியின் இனவெறி இமேஜினால் மோடி எந்தக் காலத்திலும் குஜராத்திற்கு வெளியே போனியாக மாட்டார் என்ற உண்மையை ஆரம்பித்ததும் மோடியை மகாத்மாவாக்கியே தீருவோம் என்ற திட்டத்துடன் உண்ணாவிரத நாடகத்திற்கு ஒத்துழைப்பு தந்ததோடு மோடியை வாழ்த்தி போற்றி புகழ்பாடும் முழுபக்க விளம்பரம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெளி யாகும் நாளிதழ்களில் வெளி வந்தன.

முழுபக்க விளம்பரம் என்ற பெயரில் கோடிக்கணக்காக ரூபாய் குஜராத் மக்களின் வரிப்பணம் ஏராளமாக வாரி இறைக்கப் பட்டது. அந்தப் பணத்திற்கு மயங்கி வாலாட்டும் நாலுகால் பிராணியைப் போல ஊடகங்கள் மோடியை வானைவிட புகழ்ந்தன. இது இலங்கை பிரச்சினையில் ஜெயவர்த்தனே தொடங்கி ராஜபக்ஷே வரை வீசிய எலும்புத்துண்டுகளுக்காக சில தமிழக ஊடகங்கள் செயல்பட்டதைப்போல தற்போது இந்தியா முழுவதும் பல்வேறு ஊடகங்களும் செயல்பட்டு, குஜராத் நரபலி மோடியின் புகழ்பாடின.

மோடியின் உண்ணாவிரதத்திற்கு எதிராக குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர்கள் சங்கர்சிங் வகேலா, அர்ஜூன் மொத்வாடியா உள்ளிட் டவர்கள் சபர்மதி ஆசிரமம் முன்பாக உண்ணாவிரதம் இருந்தனர்.

மோடியின் உண்ணாவிரத நாடகத்தைக் கண்டித்து குஜராத் இனப்படுகொலையில் நரோடா பாட்டியாவில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம்களின் உறவினர் கள் தர்ணா போராட்டம் நடத்தப்புறப்பட்டனர். போராட்டக் குழுவினரோடு இந்திய விண்வெளி இயலின் தந்தையான விக்ரம் சாராபாயின் மகள் மல்லிகா சாராபாய் மற்றும் ஜன்சங்கர் மஞ்ச்சின் தலைவரும் பாதிக்கப்பட்ட மக்களின் வழக்கறிஞருமான முகுல்சின்கா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த தேசத்தில் ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் ஐந்து கோடி மக்கள் தவிக்கின்றனர். ஒருநாளைக்கு இருபது ரூபாய் கூட தினக்கூலி பெறமுடியாத அவலநிலையில் லட்சோபலட்சம் இந்தியர்கள் வாடிவரும் நிலையில் 180 கோடி செலவழித்து 5 நட்சத்திர பாணியிலான உண்ணாவிரதம் இருந்த மோடி, ஏழை இந்தியர்களை அவமானப்படுத்தியிருக்கிறார்.
மோடியை வாக்குசீட்டின் மூலமும் சட்டப்படியும் தண்டி க்க ஒட்டுமொத்த இந்தியா காத்திருக்கிறது.
--ஹபிபா பாலன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக