AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 31 அக்டோபர், 2012

புயல் சின்னம் எதிரொலி வீராணம் பகுதியில் பாதுகாப்பு தீவிரம்

காட்டுமன்னார்கோவில்,:காட்டுமன்னார்கோவிலில் உள்ள மிக பெரிய ஏரி வீராணம் ஏரி. இந்த ஏரிக்கு வடவாறு மூலம் தண்ணீர் வருகிறது. ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது. பாசனத்திற்கும் பயன்படுகிறது. இந்த ஏரி அரியலூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழைநீர் வடிவதற்கு மிகப்பெரிய வடிகாலாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் ஏரி நிரம்பி உபரி நீர் வெள்ளியங்கால் மதகு வழியாக வெளியேற்றப்படும். இதனால் பல்வேறு கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்கள் பாதிக்கப்படுவர். படகு மூலம் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக சமுதாய நலக்கூடங்கள், புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்படுவர்.

இன்று காலை கொள்ளுமேடு அருகில் வீராணம் ஏரியில் எடுக்கப்பட்ட புகைப்படம்.



 நீலம் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.லால்பேட்டை,சிதம்பரம் ஆகிய பகுதியின் முக்கிய விவசாய நீர் ஆதாரமாக திகழும் வீராணம் ஏரியில் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இஸ்லாம் எனக்கு மகிழ்ச்சியையும், அன்பையும் தந்தது: இஸ்லாத்தை தழுவிய முன்னாள் நடன மங்கை ஹீதர் மாத்யூஸ்!


லண்டன்:அரைக்குறை ஆடையுடன் இரவு விடுதிகளில் நடனமாடிய பிரிட்டனைச் சார்ந்த ஹீதர் மாத்யூஸ் என்ற 27 வயது பெண்மணி, இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட பின் அதன் மூலம் கிடைத்துவரும் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார். இதுவரை கிடைக்காத மகிழ்ச்சியும், பாதுகாப்பும், அன்பும் முஸ்லிமாக மாறி பர்தா அணிந்து தலையை மறைக்க துவங்கியவுடன் கிடைப்பதாக பிரிஸ்டன் நகரைச் சார்ந்த மாத்யூஸ் கூறுகிறார். 2 பெண் குழந்தைகளுக்கு அன்னையான ஹீதர் மாத்யூஸ், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இஸ்லாத்தை தழுவியிருந்தார்.

பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது அவசியம் – மத்திய அமைச்சர் ரஹ்மான் கான்!


புதுடெல்லி:பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களை தழுவிய தலித்துகளுக்கும் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று ரஹ்மான் கான் பி.டி.ஐ செய்தி ஏஜன்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அவர் கூறியது: “இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒரே நிவாரணம் அல்ல. இருப்பினும் அது பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையாகும். 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு அரசு தரப்பின் சட்ட நடைமுறை வீழ்ச்சிகளை பிரதிபலிக்கிறது.

பொய்ப் பிரச்சாரங்களுக்கு எச்சரிக்கையாக அமைந்த பாப்புலர் ஃப்ரண்டின் சமநீதி மாநாடு!


கோழிக்கோடு:நவீன சமூக இயக்க சக்தியின் வளர்ச்சியை பொய்ப் பிரச்சாரங்களின் மணல் கோட்டையை கட்டி தடுக்க முடியாது என்ற பிரகடனத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமநீதி மாநாடு கோழிக்கோடு கடற்கரையில் புதிய வரலாற்றை எழுதியது.
வளர்ச்சி, சீர்திருத்தம், சுதந்திரம், நம்பிக்கை ஆகியவற்றை பிரதிபலிக்கும் மூவர்ண கொடியை ஏந்தியவாறு கேரளாவின் மலபார் பகுதியில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இருந்து மாநாட்டிற்கு வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அவதூறு பிரச்சாரங்களுக்கு தங்களது எதிர்ப்புணர்வை பறைசாற்றினர்.

நாகை - நெல்லூர் இடையே ‘நிலம்’ புயல் இன்று கரையை கடக்கும்

சென்னை: வங்கக்  கடலில் உருவாகியுள்ள ‘நிலம்’ என்ற புயல் இன்று மதியம் கரையை கடக்கிறது. அப்போது 100 கிமீ வேகத்தில் காற்று வீசும். தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவ மழை கடந்த 20ம் தேதி முதல் பெய்யத் தொடங்கியது. அப்போது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி அது வலுப்பெற்று மேற்கு நோக்கி நகர்ந்து அரபிக் கடல் வழியாக சோமாலியாவுக்கு சென்றது. அப்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், கடந்த 26ம் தேதி வங்கக்கடலில் தென் கிழக்கு திசை யில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்தம் உருவானது. அது மெல்ல மெல்ல நகர்ந்து மேற்கு திசையில் பயணிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு அது மேலும் வலுப்பெற்று, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் தென் தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்தது.அதற்கு பிறகு அந்த காற்றழுத்த மண்டலம் நேற்று காலை சென்னைக்கு தென் கிழக்கே 450 கிமீ தெலைவில் நெருங்கி வந்தது. அதனால் நேற்று அதிகாலை முதலே சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட கடலோரப் பகுதியிலும் மழை பெய்யத் தொடங்கியது. நேற்று பகல் முழுவதும் மழை பெய்தபடியே இருந்தது. அதில் அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 150 மிமீ மழை பெய்துள்ளது.

செவ்வாய், 30 அக்டோபர், 2012

கடலூர் மாவட்டத்தில் பரவுகிறது வைரஸ் காய்ச்சல் அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளி வருகை அதிகரிப்பு


கடலூர், :  கடலூர் மாவட்டத்தில் பரவு வரும் வைரஸ் காய்ச்சலால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் வருகை அதிகரித்து வருகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கு சித்த மருத்துவத்தில் உருவாக்கப்படும் நிலவேம்பு குடி நீருக்கு (சூப்புக்கு) டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.
/
மாறி வரும் சீதோஷ்ணம் மட்டுமின்றி கொசு, பன்றி, பறவைகளின் மூலமும் பல்வேறு நோய்கள் பரவி வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் சுகாதாரத்தின் மீதான நம்பிக்கை மேலோங்கி வருகிறது. ஆனாலும் நோய் தடுப்பு நடவடிக்கை என்பது கைநழுவிய காட்சியாகவே கடலூர் மாவட்டத்தில் உள்ளது. டெங்கு காய்ச்சல் உயிரிழப்புகள் மாவட்டத்தில் முதன்மையாக இல்லையென்றாலும் நோய்களுக்கான அறிகுறியாக உள்ள வைரஸ் காய்ச்சல் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் பிரதானமாக உருவெடுத்துள்ளது.

இன்டர்நெட் பயன்படுத்துவது இந்தியாவில் 12.5 கோடி பேர்

புதுடெல்லி : உலக அளவில் இன்டர்நெட் சந்தை வளர்ச்சியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு சராசரியாக 12.5 கோடி பேர் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இன்டர்நெட் பயன்பாடு குறித்து தொழில் வர்த்தக அமைப்பான அசோசேம், காம்ஸ்கோர் நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு நடத்தியது. இதன் முடிவு குறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: