AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 7 பிப்ரவரி, 2013

டெல்லியில் மோடிக்கு கடும் எதிர்ப்பு – மாணவர்கள் போராட்டம்! போலீஸ் தடியடியால் பரபரப்பு!


டெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி டெல்லி ஸ்ரீராம் காலேஜ் ஆஃப் காமர்ஸில் வளர்ச்சியைக் குறித்து உரை நிகழ்த்துவதை எதிர்த்து பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கேம்பஸ் ஃப்ரண்ட், எஸ்.ஐ.ஒ, டி.எஸ்.யு, ஐஸா உள்ளிட்ட மாணவர் அமைப்புகளின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. பேராசிரியர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டனர்.
மாலை 3 மணி அளவில் ஆர்ட் காலரியின் அருகில் இருந்து துவங்கிய மோடி எதிர்ப்புப் பேரணியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர். இப்பேரணி ஸ்ரீராம் கல்லூரிக்கு செல்லும் வழியில் போலீஸ் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இதனை அகற்றிவிட்டு முன்னேறிய பேரணி மீது போலீசார் தடியடி மற்றும் தண்ணீரை பாய்ச்சினர்.
இதனிடையே பேரணியில் ஊடுருவிய ஏ.பி.வி.பி, பா.ஜ.க குண்டர்கள் குழப்பத்தை ஏற்படுத்த முனைந்தனர். சிறிய அளவிலான மோதலும் ஏற்பட்டது. பின்னர் போலீசார் மாணவர்களை கைது செய்தனர். போலீஸ் கைது செய்த மாணவர்களை ஏ.பி.வி.பி குண்டர்கள் தாக்குவதற்கான வாய்ப்பை போலீசார் ஏற்படுத்தியது மோதலுக்கு வழிவகுத்தது.

புதன், 6 பிப்ரவரி, 2013

லால்பேட்டை இஜ்திமா இரண்டாம் நாள் காட்சி தொகுப்பு


 லால்பேட்டை தப்லீக் இஜ்திமாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

திங்கள், 4 பிப்ரவரி, 2013

கோவையில் மக்கள் வாழ்வுரிமை மாநாடு புகைப்படக்காட்சிகள்:



 கோவையை ஸ்தம்பிக்க வைத்தது ம.ம.க...

லால்பேட்டை தப்லீக் இஜ்திமாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு



 லால்பேட்டை தப்லீக் இஜ்திமாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு இஜ்திமா முதல் நாள் காட்சி தொகுப்பு

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம்: 7 காட்சிகளை நீக்க சம்மதம்; வெளியீடு குறித்து உடனடி அறிவிப்பு: கமல்


சென்னை :”விஸ்வரூபம்’ பட விவகாரம் தொடர்பாக, அரசு தரப்பு, முஸ்லிம் அமைப்பினர், கமல் தரப்பினர் இடையே நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. இதில் இரு தரப்புக்கும் உடன்பாடு ஏற்பட்டது. சர்ச்சைக்குரிய 7 காட்சிகளை நீக்க கமல் சம்மதம் தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம் பட விவகாரத்தில், “முஸ்லிம் அமைப்பினருடன், கமல் பேசி சமரச ஒப்பந்தம் செய்து கொண்டால், படத்தை வெளியிட, அரசு ஒத்துழைக்கும்’ என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். இதையடுத்து, நேற்று முன் தினம், முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சு நடத்த, கமல் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு, கமல்ஹாசன், முஸ்லிம் அமைப்பினர் என, முத்தரப்பும் ஒரே நேரத்தில் பேச்சு நடத்த வேண்டும் என்று, முஸ்லிம் அமைப்புகள் சார்பில், ஒரு மனதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று, 12:00 மணிக்கு, தலைமை செயலகத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிர்வாகி சந்திரஹாசன், டைரக்டர் அமீர், முஸ்லிம் அமைப்புகள் சார்பில், இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஹனீபா, சிக்கந்தர் ஆகியோர், உள்துறை செயலர் ராஜகோபாலை சந்தித்து பேசினர்.
அப்போது, முத்தரப்பு பேச்சு வார்த்தையில் பங்கேற்க சம்மதம் தெரிவித்து கடிதம் கொடுத்தனர். முத்தரப்பு பேச்சுவார்த்தை குறித்தும், ஆலோசனையை எங்கே நடத்துவது என்பது குறித்தும், உள்துறை செயலர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து பேசினர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த ஆலோசனைக்கு பின், நேற்று மாலை பேச்சுவார்த்தை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், மாலையில் கூட்டம் நடக்கவில்லை.

சனி, 2 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகாரப்பூர்வ தடை!


அபுதாபி:வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அவமதிக்கும் வகையில் நடிகர் கமலஹாசன் இயக்கி தயாரித்துள்ள  ‘விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கு அதிகாரப்பூர்வமாக தடை
விதித்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய மீடியா கவுன்சில்(என்.எம்.சி) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 24-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தடபுடலான சடங்குகளுடன் இத்திரைப்படம் வெளியாக இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இத்திரைப்படத்திற்கு எதிராக எழுந்த எதிர்ப்புகள் அரசின் காதுகளுக்கு எட்டியதை தொடர்ந்து தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டிருந்தது.

லால்பேட்டையில் நாளை ஞாயிறு துவங்க இருக்கின்ற தப்லீக் இஜ்திமா


லால்பேட்டையில் நாளை ஞாயிறு  துவங்க இருக்கின்ற தப்லீக்  இஜ்திமாவுக்கான பணிகள் சிறப்பாக அமைக்கப்பட்டு லால்கான் தோப்பு வெள்ளை பந்தலுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது மேலும் ஒளு செய்வதற்கான ஏற்பாடுகளும் சிறப்பாக அமையபெற்றுள்ளது .

Thanks lalpet.net

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

பிளாஸ்டிக் தடை மாவட்டத்தில் இன்று முதல் அமலுக்கு வருகிறது…!


கடலூர் : பிப்-01
கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள் ளாட்சி அமைப்புகளில் இயற்றப்பட்ட தீர்மானங்களின் கருத்துக்கள் இன்று முதல் செயல்முறைக்கு வருகிறது. இது குறித்து கலெக்டர் கிர்லோஷ்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 683 கிராம ஊராட்சிகளில் பிளாஸ்டிக் கேரி பைகளினால் ஏற்படும் தீய விளைவுகளை தடுக்கும் பொருட்டும் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் பொருட்டும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் தானாக முன்வந்து தீர்மானங்களை இயற்றியுள்ளன.
/
கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் பிளாஸ்டிக் கேரி பைகளை தடை செய்வது ஒருமித்த கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் இயற்றப்பட்ட தீர்மானங்களின் சாராம்சம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
/
கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் இயற்றப்பட்ட தீர்மானங்களின் கருத்துக்கள் இன்று முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.