AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 8 ஜனவரி, 2013

தாய் நாட்டை எப்படி நேசிக்கவேண்டும் என்பதுக் குறித்து காந்தியை கொன்றவர்கள் எங்களுக்கு கற்றுத்தர வேண்டாம்! – அஸாதுத்தீன் உவைசி!


ஹைதராபாத்:எனது தாய்நாட்டை நேசிப்பது எப்படி என்று காந்தியைக் கொன்றவர்கள், பாபர் மஸ்ஜிதை இடித்தவர்கள், குஜராத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களைக் கொன்றவர்களிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை ஹைதராபாத் எம்.பி.யும், மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவருமான அஸாதுத்தீன் ஒவைசி கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள நிர்மல் நகரில் கடந்த மாதம் 24ம் தேதி நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் எம்.எல்.ஏ.அக்பருத்தீன் ஒவைசி மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரது சகோதரர் ஹைதராபாத் எம்.பி.யும், மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவருமான அஸாதுத்தீன் ஒவைசி ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள டண்டூரில் நடந்த கூட்டத்தில் பேசினார்.

திங்கள், 7 ஜனவரி, 2013

நாடளுமன்ற தேர்தலில் ம.ம.க. வலுவான கூட்டணியில் இடம் பெறும்: ஜவாஹிருல்லா!

கடலூர்: நாட்டு நலன் கருதியும் சமுதாய நலன் கருதியும் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி வலுவான கூட்டணியில் இடம் பெறும் என்று பேராசிரியர் ஹெச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
த.மு.மு.க. மற்றும் ம.ம.க.வின் மூத்தத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஹெச். ஜவாஹிருல்லா தொகுதி நலப்பணிகளுக்காக சென்னையிலிருந்து இராமநாதபுரம் செல்லும் வழியில் கடலூர் மாவட்டத்தில் புதிய கிளை அலுவலகங்கள் திறப்பு விழாவிற்காக பரங்கிப்பேட்டை மற்றும் லால்பேட்டைக்கு வருகை புரிந்தார்.

பாப்புலர் ஃப்ரண்டின் தமிழக தலைவராக மீண்டும் ஏ.எஸ்.இஸ்மாயீல் தேர்வு!


தேனி:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவராக கோவையைச் சார்ந்த ஏ.எஸ்.இஸ்மாயீல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்ட முத்துதேவன் பட்டியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுக்குழு நடைபெற்றது. ஜனவரி 4,5,6 ஆகிய தினங்களில் நடைபெற்ற இப்பொதுக்குழுவுக்கு மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் தலைமை வகித்தார்.
தலைமை உரையாற்றிய ஏ.எஸ்.இஸ்மாயீல் தனது உரையில், பாப்புலர் ஃப்ரண்ட் கடந்த காலங்களில் பயணித்த பாதை மற்றும் அதன் வளர்ச்சி குறித்து சுட்டிக்காட்டினார்.
மாநில பொதுச் செயலாளர் ஏ.காலித் முஹம்மது ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய அளவிலான பணிகளைக் குறித்து தேசிய செயலாளர் எம்.முஹம்மது அலி ஜின்னா உரையாற்றினார்.

லால்பேட்டை மதினா தெரு எம்.ஏ. ஜமாலுத்தீன் மறைவு…

லால்பேட்டை மதினா தெரு மதார்கனி எம்.ஏ. ஜமாலுத்தீன் அவர்கள் இன்று 07.01.2013 காலை 08 மணியளவில்   தாருல் பனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னாலில்லாஹி வ இலைஹி ராஜிஊன்.  ஜனாசா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகைக்கு பின் பெரிய பள்ளிவாசல் கபருஸ்தானில் நடைப்பெறும். {இவர் மவுலானா தெருவில் இருக்கும் ஹாஜி எம்.ஏ. பத்ஹூத்தீன் அவர்களின் சகோதர் ஆவார்}

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

லால்பேட்டை மதரஸாவிற்கு தமுமுக நிர்வாகிகள் வருகை..

 கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த தமுமுக-மமக மூத்த தலைவரும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்,மமகபொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி,மமக இணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது,தமுமுக மாநில செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜா கனி,தமுமுக தலைமைக் கழக பேச்சாளர் என்.ஏ.தைமிய்யா ஆகியோர் புகழ்பெற்ற லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரிக்கு மரியாதை நிமித்தமாக வருகை புரிந்தனர்.

காட்டுமன்னார்கோவிலில் கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரிப்பு: பொதுமக்கள், வியாபாரிகள் அச்சம்

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியல் சில நாள்களாக கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள், வியாபாரிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. 

காட்டுமன்னார்கோவில் கச்சேரி தெருவில் உள்ள ஒரு பலசரக்கு கடையில் நேற்று முன்தினம் ஒரு பெண் 500 ரூபாய் கொடுத்து சில்லறை வாங்கி சென்றுள்ளார். இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கல்லாப்பெட்டியில் உள்ள பணத்தை கடை உரிமையாளர் எண்ணியுள்ளார், அதில் 500 ரூபாய் கள்ளநோட்டு ஒன்று இருந்தது.

இதுகுறித்து கடையில் வேலை செய்யும் பெண்ணிடம் கேட்டபோது, ஒரு பெண் 500 ரூபாயை கொடுத்து தன்னிடம் சில்லரை வாங்கி சென்றதாக அவர் கூறினார். சில்லரை வாங்கி சென்ற அதே பெண் நேற்றும் அந்த கடைக்கு வந்து 500 ரூபாய் கொடுத்து சில்லரை கேட்டுள்ளார். அப்போது சுதாரிக்கொண்ட கடையின் உரிமையாளர் காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

யாசர் அரஃபாத் – ராபியத்துல் பசரியா திருமணம்

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}
வாழ்த்துக்களுடன்..  கொள்ளுமேடு தமுமுக, கொள்ளுமேடுடைம்ஸ் இணையதளம்..

கொள்ளுமேடு தமுமுக மாணவரணி பொதுக்குழு கூட்டம்..!!

கடலூர் தெற்கு மாவட்டம் கொள்ளுமேடு கிளை தமுமுக மாணவரணிபொதுக்குழுக் கூட்டம் 05-01-2013 சனிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பின்னர் கிளை செயலாளர் ஏ.கே.வஜ்ஹூல்லா தலைமையில் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.கிளைநிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.கிளை மாணவரணி செயலாளர் வி.முஹம்மது ரியாஸ் மாணவரணியின்செயல்பாடுகள் பற்றி விளக்கினார்.அல்அய்ன் மண்டல தமுமுக நிர்வாகி எப்.முஹம்மது ரிஃபாயி மாணவரணி ஏன்..? எதற்கு..? என்ற தலைப்பில் உரையாற்றினார்.