AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 17 டிசம்பர், 2012

லால்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உருவாக போராட்டம் நடத்தப்படும் தமுமுக தீர்மானம்


லால்பேட்டை நகர தமுமுக, மமக பொதுக்குழு கூட்டம் 15.12.2012 மாலை நடைப்பெற்றது.
தமுமுக, மமக கடலூர் {தெர்கு} மாவட்ட தலைவர் எம்.ஹெச்.மெஹராஜ்தீன் தலைமை தாங்கினார் முஹம்மது மாசூக் கிராத் ஓதினார் தமுமுக மாவட்ட செய்லாளர் என்.அமானுல்லா, மமக மாவட்ட செயலாளர் ஏ. யாசர் அரபாத், தமுமுக, மமக மாவட்ட பொருளாலர் முஹம்மது அய்யூப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மவுலவி எம்.ஒய்.முஹம்மது அன்சாரி தமுமுக வின் பணி பற்றி உரையாற்றினார்.
பொதுக்குழு கூட்டதில் மாவட்ட துனை , நகர ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .
பொதுக்குழு கூட்டதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 150 – வது ஆண்டு விழா அறிவிப்பு…


எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது ஜாமிஆ நிறுவப்பட்டு இவ்வருடத்துடன் 150 ஆண்டுகள் நிறைவடைகிறது. அல்ஹம்துலில்லாஹ்!
இதனைத் தொடர்ந்து இவ்வருடம் 150-வது ஆண்டு விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே நமது ஜாமிஆவில் மவ்லவி மன்பஈ, ஃபாஜில் மன்பஈ, ஹாபிழ் ஸனது பெற்ற கண்ணியத்திற்குறிய உலமாக்கள் மற்றும் ஹாபிழ்கள் ஜாமிஆவோடு உடனடியாக தொடர்புக்கொண்டு தங்கள் முகவரி, மற்றும் கைபேசி எண்களை தெரியபடுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக கிர்லோஷ் குமார் பதவி ஏற்பு


கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக நேற்று பதவி ஏற்ற ஆர்.கிர்லோஷ்குமார், ‘பொதுமக்களின் குறைகளை விரைவாக தீர்க்க முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன்‘ என உறுதியளித்தார்..
புதிய கலெக்டர்
கடலூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றிய ராஜேந்திரரத்னூ திடீரென மாற்றப்பட்டு வணிகவரித்துறை இணைக்கமிஷனராகவும், அப்பதவியில் இருந்த ஆர்.கிர்லோஷ்குமார்(வயது36) கடலூர் மாவட்ட கலெக்டராகவும் மாற்றப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக ஆர்.கிர்லோஷ்குமார் பதவி ஏற்கும் நிகழ்ச்சி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மதியம் 12–30 மணிக்கு நடந்தது. அங்கு புதிய கலெக்டராக ஆர்.கிர்லோஷ்குமார் பதவி ஏற்றுக்கொண்டார். அவரிடம் பணிமாறுதலாகி செல்லும் ராஜேந்திரரத்னூ பொறுப்புகளை ஒப்படைத்து விடைபெற்றார்.
மகிழ்ச்சி அடைகிறேன்
புதிய கலெக்டராக பதவி ஏற்ற ஆர்.கிர்லோஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:–
கடலூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பு ஏற்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு முன்பு கலெக்டராக இருந்த ராஜேந்திரரத்னூ எனது நெருங்கிய நண்பர். நானும் அவரும் ஒரே ஆண்டில் ஐ.ஏ.எஸ். பணிக்கு தேர்வு செய்யப்பட்டோம். அவர் ஏறத்தாழ 5 ஆண்டுகள் கடலூர் மாவட்டத்தில் நல்ல முறையில் பணியாற்றியிருக்கிறார்.

H.ஹனஸ்-நசீரா பாணு திருமணம்

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}
வாழ்த்துக்களுடன்.. கொள்ளுமேடுடைம்ஸ் இணையதளம்..

வியாழன், 13 டிசம்பர், 2012

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல்

காகித ரூபாய் நோட்டுகள் விரைவில் சேதம் அடைவதால் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதை மத்திய மந்திரி ப.சிதம்பரம் உறுதி செய்தார். பாராளுமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது கேட்டப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதலில் 10 ரூபாய் நோட்டு பிளாஸ்டிக்கில் வெளியிடப்படும். தொடர்ந்து மற்ற ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் தற்போது வெளியிடப்படும். காகித ரூபாய் நோட்டுக்கள் 1 வருடம் கூட உழைப்பதில்லை. எனவே பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடிக்க அரசு முடிவு செய்துள்ளது.

புதன், 12 டிசம்பர், 2012

சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலில் விவசாயிகளுக்கு சிட்டா வழங்க சிறப்பு ஏற்பாடு

கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீர் இன்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து காவிரி டெல்டா விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு பிரிமிய தொகையை அரசே செலுத்த முடிவு செய்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் இத்திட்டம் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
 இத்திட்டத்தில் சேரும் விவசாயிகள் உரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் சிட்டா மற்றும் அடங்கல் நகல்களை இணைத்து அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேற்று மாலைக்குள் அளிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் இணைய தள தொடர்பு மற்றும் மின்வெட்டு காரணமாக சிட்டா வழங்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. 

செவ்வாய், 11 டிசம்பர், 2012

மங்கலம்பேட்டையில் ஜமாஅத்துல் உலமா சபை பொதுக்குழு

விருத்தாசலம், : விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் ஜமாஅத்துல் உலமா சபை பொதுக்குழு கூட்டம் நடந்தது. 
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில்  கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர்  ஷபியுல்லாஹ்மன்பஈ தலைமை   தாங்கினார். மாவட்ட செயலாளர் அப்துர்ரஜாக் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர்கள் அப்துர்ரஷீத்ரஹ்மானி முன்னிலை வகித்தனர்.  மாநில தலைவர்  அப்துர்ரஹ்மான், மாநில துணை பொதுச்செயலாளர் நூருல்அமீன், லால்பேட்டை அரபி கல்லூரி பேராசிரியர் ஜாகிர்உசேன் ஆகியோர் பேசினர். 

வியாழன், 6 டிசம்பர், 2012

புவனகிரியில் நடைபெற்ற தமுமுகவின் தொடர் முழக்க ஆர்பாட்டம்.



பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட நினைவு நாளான டிசம்பர் 6 ஆம் தேதியை முன்னிட்டு,பாபர் மஸ்ஜித் வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்கவும் பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமுமுக கடலூர் தெற்கு மாவட்டத்தின் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் தமுமுகவின் மாவட்ட துணைச் செயலாளர் சவுக்கத் அலி கான் தலைமையில் நடைபெற்றது.

தமுமுக ஊழியர் கொள்ளுமேடு ரிஃபாயி இறைமறை வசனங்களை ஓதினார்.தமுமுக மாவட்ட செயலாளர் என் அமானுல்லா வரவேற்புரையாற்றினார்.தமுமுக மாவட்ட பொருளாலர் ஏ.எம்.அய்யுப் மமக முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.யாசிர் அரஃபாத் உள்ளிட்ட மாவட்ட தமுமுக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.